Skip to main content

சிறையில் முகிலனை பார்க்கச் சென்றால் சிறைவளாகத்தில் கியூ பிராஞ்ச் விசாரணை... டிஐஜியிடம் புகார்!

Published on 15/09/2018 | Edited on 15/09/2018

சூழலியல் செயற்பாட்டாளர் தோழர் முகிலன் கூடன்குளம் போராட்டத்திற்காக (13 வழக்குகள் ) கைது செய்யப்பட்டு பாளை சிறையில் வைக்கப்பட்டிருந்து ஜூலை முதல் நாள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றி தனி வளாகத்தில் அடைத்து மேலும் பல வழக்குகளை போட்டுள்ளனர். முகிலன் சிறைபட்டு 360 நாட்கள் ஆன நிலையில் கூடன் குளம் போராட்ட வழக்குகளில் பிணை கிடைத்துள்ளது. மற்ற அதனால் இன்னும் பல புதிய வழக்குகள் பதிவாகலாம் என்ற நிலையில் முகிலனுடன் இணைந்து போராட்டங்களை சந்தித்து வந்த ராஜேஸ்வரி மதுரை சிறையில் உள்ள முகிலனை மனுபார்க்கச் சென்ற போது வழக்கமாக விபரங்கள் கொடுக்கும் இடத்தில் விபரங்களை பெற்றுக் கொண்ட சிறை காவலர்கள் முன்னால் உள்ள அறையிலும் தகவல்களை கொடுங்கள் என்று அனுப்பியுள்ளனர். 

 

mukilan

 

சிறைவளாகத்தில் தனிஅறையில் இருந்த கியூ பிராஞ்ச் அதிகாரிகள் பெயர் விபரங்களுடன் சுயவிபரங்களையும் பதிவு செய்துள்ளனர். இது பற்றி முகிலன் சிறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்த பிறகும் விசாரணை நடப்பதால் ராஜேஸ்வரி சிறை துறை டிஐஜியிடம் புகார் கொடுத்துள்ளார். வரம்பு மறி விசாரனை நடக்கிறது. சிறை விதிகளை மறந்துள்ளனர். ஆகவே நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளனர்.

 

 

இதுபற்றி ராஜேஸ்வரி நம்மிடம்.. 

 

சிறை விதிகளை மதிக்காமல் விசாரணை நடப்பதை சிறை அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் ரவிச்சந்திரனை பார்க்க வரும் நபர்களை பற்றிய விபரம் சேகரிக்கிறார்கள். என்றனர் ஆனால் சிறையில் அறை கொடுத்திருக்கிறார்கள். இந்த செயல் என்னைப் போன்றவர்களை அச்சுறுத்துவதாக உள்ளது என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.