Skip to main content

'மாவட்ட நிர்வாகத்தை வைத்து மக்களை அச்சுறுத்தினால் வேடிக்கை பார்க்கமாட்டோம்' - வேல்முருகன் பேட்டி

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

'If we threaten the people with the district administration, we will not be amused' - Velmurugan interview

 

வருகிற 26ஆம் தேதி என்.எல்.சிக்கு நிலம், வீடுகள் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக த.வா.க வேல்முருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.  மாநில நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், நா.பாலு, வே.க.முருகன், ஞானசேகரன், ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எ.நா.அறிவழகன் வரவேற்றார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார்.

 

இக்கூட்டத்தில் விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிதாகத் தனி மாவட்டம் அறிவிக்க வேண்டும். விருத்தாசலம் மணிமுத்தாற்றில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகள் மற்றும் கழிவு நீரை அகற்றி தூய்மைப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளிப்பாடி - காவனூர் இடையே வெள்ளாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்துத் தர வேண்டும், வீடு தீப்பற்றி எரிந்தால் நிவாரண நிதியாக ரூபாய் 5 ஆயிரம் தருவதை ரூபாய் 25,000 ஆக உயர்த்தித் தர வேண்டும்,  விருத்தாசலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் சர்க்கரை ஆலை நிறுவனங்கள் விவசாயிகளுக்குத் தர வேண்டிய 75 கோடி ரூபாய் நிலுவைத் தொகை பணத்தை உடனடியாக பெற்றுக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

'If we threaten the people with the district administration, we will not be amused' - Velmurugan interview

 

இக்கூட்டத்தின் முடிவில் தி.வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், " வருகிற 26 ஆம் தேதி என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம், வீடுகளைக் கொடுத்த மக்களுக்கு நிரந்தர வேலை, ஏக்கருக்கு ஒரு கோடி இழப்பீடு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில்  பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. என்.எல்.சி நிர்வாகம் இந்த மாவட்ட மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். என்.எல்.சி நிர்வாகம் காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தை வைத்து மக்களை அச்சுறுத்தினால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேடிக்கை பார்க்காது. நெய்வேலியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், ம.தி.மு.க துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, காங்கிரஸ் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், மக்கள் அதிகாரம் வழக்கறிஞர் ராஜி மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின்  தலைவர்கள், பிரதிநிதிகள், என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட இருக்கின்ற 53 கிராம மக்கள், விவசாயிகள் பங்கேற்கிறார்கள். விவசாயிகளின் உரிமையை மீட்டெடுக்கவும், மண்ணின் மைந்தர்களுக்கும், தமிழர்களுக்கும் 90 சதவீத வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டி எனது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் இப்பிரச்சனையை தீர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி. ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் நிலத்தைக் கையகப்படுத்த விடமாட்டோம். சாகுபடி பணிகள், அறுவடை பணிகள் நடைபெறும்போது என்.எல்.சி நிர்வாகம் நில அளவீடு செய்யக்கூடாது. நிலத்தை பாழ்படுத்தக் கூடாது. என்.எல்.சி நிர்வாகம் நிலத்தை பாழ்படுத்த விடமாட்டோம் எனத் தமிழக முதல்வர் எனக்கு உறுதியளித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இன்ட்கோசர்வ் சொசைட்டியில் உள்ள தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

 

ஒவ்வொரு முறையும் என்.எல்.சி நிறுவனத்தின் மூலம் பிரச்சனைகள் ஏற்படும்போது ஒப்பந்தங்கள் போடப்படுகிறது. ஆனால் விவசாயிகள், போராட்டங்களில் ஈடுபடுபவர்களிடம் போடப்படும் ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. கொடுத்த வாக்குறுதிகளை என்.எல்.சி நிர்வாகம் நிறைவேற்றுகிறதா என அமைச்சர், எம்.எல்.ஏக்கள், விவசாயிகள் ஆகியோர் கொண்ட குழுவை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும். நான் கலந்துகொண்டு போட்ட 2  ஒப்பந்தங்களை இதுவரை நிறைவேற்றவில்லை. விவசாயிகளை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை, மக்கள் தாங்களாக நிலத்தை முன்வந்து கொடுக்கும் வரை நிலத்தில் என்.எல்.சி நிர்வாகம் கால் வைக்கக் கூடாது. அதனையும் மீறி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு வந்தால் அடுத்தடுத்த போராட்டங்களை மிக வேகமாகத் தீவிரமாக நான் முன்னெடுப்பேன்.

 

ஒவ்வொரு இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளின் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால் அவை முறையாக பாதுகாக்கப்படாமல் விளைபொருட்கள் மழையில் நனைந்து முளைத்து வருகின்றன. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் விளைபொருட்களை பாதுகாக்க ஆங்காங்கே கிடங்குகள் அமைத்துத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் மாவட்ட மாநகராட்சிகளில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். பகுதி வாரியாகவும் பணிபுரியும் பத்திரிகையாளர்களையும் நல வாரியத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

 

இக்கூட்டத்தில் விருத்தாசலம் நகரச் செயலாளர் பி.ஜி.சேகர், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், தியாகராஜன், தங்கமணி, தங்கவேல், சிலம்பரசன், சுரேந்தர், பன்னீர்செல்வம், சங்கர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நடிகர் விஜய் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்' - சீண்டிய எல்.முருகன்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
MM

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்ஸாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

NN

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் அனைவரும் வாழ்ந்து வரும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA)  2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நடிகர் விஜயின் அறிக்கை குறித்த கேள்விக்கு பாஜகவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பு எதுவும் இல்லை. இச்சட்டம் குறித்து நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'15 மணி நேரத்தில்...'- திணறிய த.வெ.க ஐடி விங் 

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
NN

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டுதான் நமது இலக்கு என்று தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய அணியை தொடங்கியும் நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து நேற்று த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார் விஜய். முதல் உறுப்பினராக விஜய் இணைந்தார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை ஃபாலோ பண்ணி, வரப் போகிற சட்டமன்ற தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்க ஏற்கனவே வெளியிட்ட எங்க கட்சியின் உறுதி மொழியை படிங்க. அது எல்லாருக்கும் பிடித்திருந்தால் விருப்பப்பட்டால் இணைஞ்சிடுங்க” என்றார்.

கட்சியில் இணைவதற்கான உறுதிமொழி வெளியிடப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்ட 15 மணிநேரத்தில் 20 லட்சம் பேர் தவெகவில் இணைத்துள்ளதாக கட்சி தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் இணைய முற்பட்டதால் அதற்கான குறுஞ்செய்தி அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சர்வர் முடங்கியதை எங்களால் முடிந்த அளவுக்கு சரிபார்த்துவிட்டோம் என தவெகவின் ஐடி பிரிவு தெரிவித்துள்ளது. அதிகபட்சம் முதல் நாளில்  5 லட்சம் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் 15 மணிநேரத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறும் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுல்லாது பல மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் குவிந்து வருவதாகவும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.