Skip to main content

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலே இருக்காது - கமல் பேச்சு!

Published on 21/12/2020 | Edited on 22/12/2020

 

 If we come to power there will be no bad issues-Kamal talk

 

மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமலஹாசன், இரண்டாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். காஞ்சிபுரத்தில் தொடங்கியவர் டிசம்பர் 21-ஆம் தேதி மதியம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் நகரில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு, பொதுமக்களைச் சந்தித்தல் என பிசியாகக் காணப்பட்டார்.

 

அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, "தன்மானம் உள்ளவர்கள் தான் கூட்டமாகச் சேர்ந்துள்ளோம். எனது மரியாதையை நான் பார்த்துக்கொள்ள வேண்டும், அதன் முதல் அடி நேர்மை தான். தமிழ்நாட்டின் துரோகம் இழைப்பவர்களுக்குக் கிடைக்கப்போகும் முதல் அடி நேர்மைதான். நான் சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நான் நேர்மையாக இருக்க வேண்டும் எனக் காட்டுகிறேன், எங்கே கொஞ்சம் நேர்மையைக் காட்டுங்களேன். எதைக் கேட்டாலும் மத்தியில் இருந்து நிதி வரவில்லை என்கிறார்கள், நீங்கள் எடுத்துக்கொண்டு போன நிதியை எடுத்தாலே எல்லாத் திட்டமும் செய்துவிடலாம்.

 

எங்கள் கட்சி நிர்வாகிகளைப் பாருங்கள். இதோ சிம்பிளாக நிற்கிறார்கள். இவர்கள் வெற்றி பெற்றால் எம்.எல்.ஏக்களாக இருக்கமாட்டார்கள். நேர்மையாக எளிமையாக உங்களுடன் இருப்பார்கள். இவர்கள் தொடர்ந்து என் கருத்துகளை எடுத்துக் கொண்டுவந்து மக்களான உங்களைச் சந்திப்பார்கள். தேர்தலை முன்னிட்டு மக்களுக்காக, 7 அம்சத் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் அறிவிக்கிறது. இல்லத்தரசிகளுக்கு அரசு சம்பளம் வழங்குவது எல்லாம் நடக்குமா என யோசிக்கிறார்கள், நிச்சயம் நடக்கும்.

 

 If we come to power there will be no bad issues-Kamal talk

 

என்னிடம் வருமானவரி கட்டியதற்கான ஆதாரம் உள்ளதா எனக் கேட்கிறார்கள். அதை, என்னைக் கேட்பவர்களிடம் கேட்கிறேன். பிக்பாஸில் நிறைய சம்பளம் தருகிறார்கள், வாங்குகிறேன். தேநீர் நிலையம் வைத்துக் கொண்டு இருந்தவர். இப்போது பணத்தில் புரண்டுகொண்டு இருக்கிறார். யாருமே நினைத்துப்பார்க்க முடியாத பணம்.

 

என் கட்சியில் இருந்து வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், சரியாகச் செயல்படவில்லை என்றால், பதவியை ராஜினாமா செய்வேன் என்கிற ஒப்பந்தத்தோடுதான் என் பின்னால் வருவார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலே இருக்காதா எனக் கேட்டால், நிச்சயம் இருக்காது. மேல்மட்டத்தில் நாங்கள் வாங்கவில்லை என்றால், கீழ்மட்டத்தில் அதிகாரிகள் வாங்கமாட்டார்கள், அவர்களை நாங்கள் திருத்திவிடுவோம்.

 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 'திண்டிவனம்–நகரி' இரயில் பாதை வேகமாகச் செயல்படுத்தப்படும். செய்யார் 'சிப்காட்' வளாகத்தில், மேலும் புதிய தொழிற்சாலைகள் உருவாகும், பாலாறு மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும், இது மக்களின் சொத்து" இவ்வாறு கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.