Advertisment

சூர்யாவிடம் பிரச்சனை செய்தால் அவர்கள் மீது பாம்பு விடுவோம் - பழங்குடியின மக்கள் கொதிப்பு!

hjk

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினார்கள். இந்நிலையில், ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், பாமக தரப்பு ‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதனைக் கண்டித்து சூர்யாவுக்கு ஆதரவாகப் பலரும் அறிக்கை வெளியிட்டுவந்தனர்.

Advertisment

இதன் உச்சகட்டமாக பாமகவைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் ஒருவர், நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் தருவதாக கூறினார். இதனையடுத்து சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டது. இதற்கிடையே, நேற்று (21.11.2021) அப்படத்தின் இயக்குநர் ஞானவேல், படத்தில் வந்த சில காட்சிகள் யாருக்காவது மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் சூர்யாவுக்கு எதிராக ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது பாம்பைக் கொண்டு எறிவோம் என்று ‘ஜெய் பீம்’ படத்திற்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய பழங்குடியின மக்கள் கூறியுள்ளனர். போராட்டம் நடத்திய அவர்கள் கையில் பாம்பு, எலியுடன் வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

Advertisment

jai bhim pmk Surya tribes
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe