Skip to main content

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் நாங்கள் ஓடிவருவோம்... – கலெக்டரின் சிறப்பு ஏற்பாடு

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான யாசகர்கள் உள்ளனர். அதேபோல் திருவண்ணாமலை நகரத்திலும் பலர் உள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் பல யாசகர்கள், வீடற்றவர்கள், அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாதவர்கள் உள்ளனர்.

 

 If a single person does not have food, we fly ... - The Collector's special arrangement


அதேபோல் கிராமப்புறங்களில் குடும்பத்தாரில் கைவிடப்பட்டவர்கள், கணவன் அல்லது மனைவி இல்லாத அல்லது பார்த்துக்கொள்ள வாரிசு இல்லாதவர்கள் என பலர் உள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவுக்கு என்ன செய்வது என மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் விளைவாக சத்துணவு மையங்கள் மூலமாக கிராமப்புறங்களில் தனித்து உள்ளவர்களுக்கு உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கிராமபுறங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் 54,171 நபர்களுக்கு 724 சத்துணவு மையங்கள் மூலமாகவும், 10 பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் 1245 நபர்களுக்கு 10 சத்துணவு மையங்கள் மூலமாகவும், 4 நகராட்சி பகுதிகளில் உள்ள 10,379 நபர்களுக்கு 5 அம்மா உணவகங்கள் மூலமாக அவர்கள் இருக்கும் இடத்துக்கே தேடிச்சென்று உணவு வழங்க வைத்துள்ளார்.

 

 If a single person does not have food, we fly ... - The Collector's special arrangement


அப்படியிருந்தும் இன்னும் பலர் ஒரு வேளை உணவுக்குகூட வழியில்லாமல் மாவட்டத்தில் உள்ளார்கள் என்கிற தகவல் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசித்து தன்னார்வலர்கள்  மூலமாக அவர்களுக்கு உணவு வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் எங்களுக்கு உணவு இல்லை எனச்சொல்லி 9345487377 என்கிற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களைத் தேடி உணவு செல்லும். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் உணவு இல்லை என 9345462676 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் வீடு தேடி சென்று தரப்படும்.

மேலும், வயது மூப்பின் காரணமாக நடக்க முடியாமல் உள்ளவர்கள் 9345472203 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் வீடு தேடி அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சென்று தர ஏற்பாடு செய்து ஏப்ரல் 4ந்தேதி அதனை அறிவித்துள்ளார்.

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் முண்டாசு கவிஞன் பாரதி. தனி ஒருவர் யாரும் உணவில்லாமல் இருந்துவிடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருவது கலெக்டரை விமர்சிப்பவர்களிடமும் பாராட்டுதலை பெற்றுத்தந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.