Skip to main content

"முடிந்தால் தமிழக சட்டசபையை முடக்கிப் பாருங்கள்"- எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

"If possible, shut down the Tamil Nadu Assembly" - Udayanidhi Stalin's retaliation to Edappadi Palanisamy!

 

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அனல் பறக்கிறது. காலில் சக்கரம் கட்டாத குறையாகப் பம்பரமாய் சுற்றி ஓட்டு வேட்டையை நடத்தி வருகின்றார்கள் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள். இதனோடு கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தென்மாவட்டம் வந்த தி.மு.க.வின் மாநில இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

 

அந்த வகையில், நெல்லை டவுண் வாகையடித் திடலில் மாநகராட்சியில் போட்டியிடுகிற தி.மு.க. வேட்பாளர்களை உதயநிதி ஸ்டாலின் ஆதரித்துப் பேசியபோது, "உள்ளாட்சியில் 50 சதவிகிதம் ஒதுக்கீடு காரணமாக இங்கே மகளிரை அதிகம் காணமுடிகிறது. பெண்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதை யாராலும் மாற்றவே முடியாது. திருச்சி, கரூர், நாகர்கோவில் என நான் போகிற இடமெல்லாம் தி.மு.க.விற்கு நல்ல எழுச்சியைக் காண்கிறேன். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள் ஆக்சிஜன் இல்லை என்ற நிலை இருந்தது. 

 

அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின், கரோனா பாதிப்பிலிருந்து பல வழிகளிலும் மக்களை மீட்டார். வட இந்திய ஊடகங்களின் கருத்துக் கணிப்பில் இந்தியாவிலேயே நம்பர் 1 முதல்வராக முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

"If possible, shut down the Tamil Nadu Assembly" - Udayanidhi Stalin's retaliation to Edappadi Palanisamy!

 

சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்றார் தலைவர் கலைஞர். அவரது வழியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். கரோனா நிவாரணமாக 4 ஆயிரம் தருவேன் என்ற அவர், சொன்னபடி இரண்டு தவணையாக அதைத் தந்தார். மகளிருக்கு இலவசப் பேருந்து பயண வசதி; அதெப்படி முடியும் என அ.தி.மு.க. கேள்வி எழுப்பிய போது, அதையும் நடத்திக் காட்டிய முதலமைச்சர், தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தபடி பெட்ரோல் விலையை 3 ரூபாய், ஆவின் பால் விலையை 3 ரூபாய் குறைத்தார்.

 

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையை முடக்கப் போகிறேன் என்கிறார். தமிழக சட்டசபையை உங்களால் முடிந்தால் முடக்கித்தான் பாருங்களேன். நமது மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 159 பேர் சட்டசபையில் உள்ளனர்" என நெல்லை மண்ணில் எடப்பாடி பழனிச்சாமிக்குச் சவால் விடுத்தார் உதயநிதி ஸ்டாலின்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.