Skip to main content

வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயற்சியா?

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

தமிழகத்தில் மே 19ஆம் தேதி நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் தருமபுரி,தேனி, திருவள்ளூர், கடலூர் உட்பட 5 மக்களவை தொகுதிகளில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19ஆம் தேதிமறுவாக்கு பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று அறிவித்தது. இந்த நிலையில் மதுரை, தேனியைப் போல தமிழகம் முழுவதும் வாக்கு இயந்திரங்களை மாற்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் துணையுடன் ஆளும்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அந்த குற்றச்சாட்டுக்களை உண்மையாக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகளும், கலெக்டரும் மாறி, மாறி கருத்துக்களை கூறிவருகின்றனர். இது இன்னும் அதிக சந்தேகத்தை உண்டாக்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் ஓட்டுமொத்தமாக குற்றம்சாட்டியுள்ளன.
 

evm



தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடந்த தேர்தலின்போது தர்மபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாகவும், திருவள்ளூரில் ஓட்டுக்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக ஓட்டுக்கள் பதிவானதாகவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் மறு தேர்தல் நடத்தும்படி திமுக கோரிக்கை விடுத்தது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்திருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ கூறியிருந்தார். இதனால் அங்கு மறு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில், வாக்கு இயந்திரங்கள் அனைத்தும், பாதுகாப்பாக பல்வேறு கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளுக்கு வெளியே சீல் வைக்கப்பட்டன. துப்பாக்கிய ஏந்திய 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. 

இந்த நிலையில் தேர்தல் நடந்து முடிந்த விட்ட நிலையில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஓட்டுப்பதிவான இயந்திரங்களை மாற்றிவிட்டு, இவற்றை வைக்கப்போவதாக தகவல் பரவியது. தேனி மக்களவை மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிகளுக்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டன. இங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், நள்ளிரவில் அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற ஆளும் கட்சியினர் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகின.இதனால் வாக்கு பதிவு எந்திரங்கள் மாற்ற முயற்சி ஏதும் நடக்கிறதா என்ற சந்தேகங்களை எதிர்கட்சிகள் எழுப்பிவருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.