Skip to main content

10 தொகுதிகளில் தேர்தலைப் புறக்கணிப்போம்... அதிமுகவுக்கு எதிராகத் தீர்மானம்!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

If the plan is not abandoned, we will boycott the elections in 10 assembly constituencies .. Three district farmers resolution ..!


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் விவசாயப் பாசனத்திற்குச் செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலில், கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் இல்லாவிடில் இந்த அரசை வரும் தேர்தலில் ஆதரிக்கப் போவதில்லை என்றும் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதோடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதியில் கீழ்பவானி பாசன விவசாயிகள் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் கீழ்பவானி பிரதான பாசன வாய்க்கால் மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனமும் 1 லட்ச ஏக்கருக்கும் மேல் மறைமுக பாசனமும் பெற்று வருகிறது. இந்த மூன்று மாவட்டப் பொதுமக்களின் குடிநீர் ஆதாராமாகவும் இது திகழ்கிறது. 


இந்த நிலையில், தமிழக அரசு கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.178 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகளுக்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால், வாய்க்காலில் செல்லும் கசிவு நீர் மூலம், பாசனம் பெறும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள், நீர் ஆதாரம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல், பாலைவனமாகும் சூழ்நிலை உள்ளது. தென்னை, வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட நீண்ட காலப் பயிர்கள் பாதிக்கப்படும் எனவும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 

 

If the plan is not abandoned, we will boycott the elections in 10 assembly constituencies .. Three district farmers resolution ..!

 

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடுக்காம்பாளைத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சார்பில், ஆலோசனைக் கூட்டம் 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் நாகவேதம்பாளையம், கடுக்காம்பாளையம், அய்யம்புதூர், பழையூர், கோரக்காட்டூர், வெள்ளாங்கோயில், கொரவம்பாளையம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் மாவட்ட விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். 

 

இக்கூட்டத்தில், கீழ்பவானி பாசன வாய்க்காலில் அமைக்கப்படும் கான்கிரீட் தளத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் இல்லாவிடில், வரும் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிராகச் செயல்படுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், தொடர் போராட்டங்களிலும் ஈடுபடுவதுடன் வரும் சட்டமன்றத் தேர்தலில் கீழ்பவானி பாசனப் பகுதிகளில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.