Skip to main content

சட்டமன்றம் சென்றால் மக்கள் நீதி மய்யம் யாருக்கு ஆதரவாக செயல்படும்??? முரளி அப்பாஸ் பதில்...

Published on 26/04/2019 | Edited on 27/04/2019

தற்போது நடந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலும், இடைத்தேர்தலும் தமிழ்நாட்டில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏனைய கட்சிகள் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த நிலையில், மக்கள் நீதி மய்யம் இன்னும் தனது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் அளித்த பதில்...

 

mnm

 

4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் எப்போது அறிவிக்க இருக்கிறது?

 

ஏற்கனவே கட்சித் தலைவர் கமல்ஹாசனின் சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டது. நாளை 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக அதற்கான கலந்தாய்வு தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வரும் சனி மற்றும் ஞாயிறு வேட்பு மனு தாக்கல் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறியதால், திங்கட்கிழமை அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். 

 

இடைத் தேர்தலுக்கான பணிகள் எவ்வாறு சென்று கொண்டிருக்கின்றன?

 

முன்பை விட மிக உற்சாகமாகவும் எழுச்சியாகவும் சென்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவை நடந்த அன்று வெளியான தகவல்கள் மிகவும் உற்சாகம் அளிக்கும்படி இருந்தது. மேலும் கட்சித் தலைவர் ஒரு தொகுதிக்கு  மூன்று நாட்கள் வீதம் ஒதுக்கியுள்ளார். இதனால் ஒவ்வொரு தெருவிற்கும் செல்ல முடியும், மக்களுடன் இன்னும் நெருங்கி பேச முடியும். இப்படி செல்கையில் பணம் கொடுத்து வாக்கு வாங்குவது என்பது மட்டுப்படுத்தப்படும்.

 

சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சில சில தொகுதிகளில் வென்று சட்டமன்றம் செல்கிறது. அந்த நிலையில் ஒருவேளை ஆட்சி மாற்றம் என்பது வந்தால் மக்கள் நீதி மய்யம் யாருக்கு ஆதரவாக செயல்படும்?

 

இந்த இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன் சேரவேண்டும் என்றால், அதை இந்தத் தேர்தலிலேயே செய்திருப்போம். ஒன்று அகற்றப்பட வேண்டியது, இன்னொன்று வந்துவிடக்கூடாது இந்த விதிமுறை அங்கேயும் பயன்படுத்தப்படும்.

 

அப்போது மக்கள் நீதி மய்யம் இருவரையுமே ஆதரிக்காதா?

 

அவர்களே ஆட்சியை தக்க வைத்துக் கொண்டாலும் சரி, இல்லை இவர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சி ஏற்றாலும் சரி, மக்கள் நீதி மய்யம் மக்களின் பிரச்சனைகளை அங்கு பேசுமே தவிர, அவர்கள் காப்பாற்றப்படுவதற்கோ, இவர்கள் வந்து சேர்வதற்கு வழி வகையோ செய்யாது. எங்களின் பங்களிப்பு அதில் இருக்காது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.