Skip to main content

''விதிகளை மீறியது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்'' - அமைச்சர் மா.சு பேட்டி

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

"If it is found that the rules have been violated, action will be taken" - Minister M. Su interviewed

 

அருப்புக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அப்போது  செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி வருவாய்த்துறை அமைச்சர் தீவிரம் முயற்சியினால் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அருப்புக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய இரண்டு இடங்களில் ஏற்கனவே இருந்த அரசு மருத்துவமனைகள் இன்றைக்கு அரசு தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அமைச்சருடைய வேண்டுகோளை தமிழகம் முதல்வர் ஏற்று மாவட்டத்திற்கு ஒரு தலைமை மருத்துவமனை என்ற நிலை இருந்ததை மாற்றியுள்ளார்.

 

விருதுநகர் மாவட்டம் உழைக்கும் மக்கள் கூடுதலாக இருக்கும் நிலையில் அமைச்சர் தீவிரமாக கேட்டு இரண்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் விருதுநகருக்கு வந்திருக்கிறது. அதில் ஒன்று அருப்புக்கோட்டை. 30 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு உள்ள நடவடிக்கைகளை இன்று அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என அங்கீகரிக்கப்பட்ட பெயர் பலகையை திறந்து வைத்திருக்கிறார்'' என்றார்.

 

'விதி மீறி  செயல்படும் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,  ''எந்த மாதிரியான விதிகளை மீறி இருக்கிறார்கள் என்பதை பொறுத்துத்தான் நடவடிக்கை இருக்கும். அந்த வகையில் ஏதாவது விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் சித்த மருத்துவம் சம்பந்தமான ஒரு விதிமீறல் இருந்தது. உடனடியாக அதை மூடி சீல் வைத்திருக்கிறோம். அப்படி ஏதாவது இருந்து யாராவது தகவல் தெரிவித்தால், விதிகள் எந்த வகையில் மீறப்படுகிறது என்ற தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.