Skip to main content

சாலையில் அவதிப்படும் மான்கள்! கண்டுகொள்ளுமா வனத்துறை!

Published on 04/03/2018 | Edited on 04/03/2018

 

maan

 

உலக வன உயிரினங்கள் தினத்தையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு விலங்குகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது தான் உயிரியில் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகள் நமக்கு தெரியவந்தது.



திருவான்மியூரில் இருந்து தரமணி செல்லும் சாலையில் உள்ளது சென்னை பல்கலைகழக மாணவியர் விடுதி. இந்த விடுதியின் முன்பாக தற்போது 30க்கும் மேற்பட்ட மான்கள் தங்களுடைய இருப்பிடத்தை இழந்து, தண்ணீருக்கும், உணவுக்கும் பொதுமக்களை எதிர்பார்த்து பரிதாபமாகக் கிடக்கின்றன. இந்த மான்களுக்கு அப்பகுதி பொதுமக்களே கோசாப்பழம் போன்ற பழவகைகளை உணவுகளாக அளித்துச் செல்கின்றனர். அதில்தான் அவை தங்கள் உயிரை தக்க வைத்துக்கொண்டிருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

 

maan1


இந்தநிலை குறித்து காவல்துறைக்கும், வனத்துறைக்கும் பலமுறை தகவல் தெரிவித்தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள். இந்தநிலைக்கு என்னக் காரணம் என்று விசாரித்த போது,

தற்போது, மான்கள் உணவிற்காக சாலையோரமாக கேட்டின் உள்ளே இருந்த தன் இடத்தை பறிகொடுத்து நின்றுகொண்டிருக்கும் அதே இடம் தான், 20 ஆண்டுகளாக கந்தன்சாவடியில் இருந்து மத்திய கைலாஷ், ஐ.ஐ.டி வரையிலும் இந்த மான்களின் சொந்த இருப்பிடமாக இருந்துள்ளது. ஆனால், தற்போது சென்னை மெட்ரோ மேம்பாலத்திற்காக இந்த காட்டின் நடுவில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்பிறகு அந்த காட்டை சுத்தம் செய்து இந்த அரசு தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

maan2



இதுகுறித்து மான்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சாலையோர வியாபாரி ஒருவர் கூறுகையில், பாவம் இந்த மான்கள் வேறு இடம் செல்வதற்கு வழியே இல்லை. சுற்றிலும் வளாகங்கள், வணிக நிறுவனங்களாகவே உள்ளன. இதைபற்றி வனத்துறை, காவல்துறைக்கு தகவல் கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இப்போதாவது பரவாயில்லை பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வந்து வைக்கிறார்கள். வரும் காலத்தில் அதுவும் வைக்க ஆள் இல்லாமல் போனால் அவற்றின் கதி என்னவென்று நினைத்தாலே பரிதாபமாக இருக்கிறது என்கிறார்.



இந்த இடத்தில் 30 மான்கள்களுக்கு மேலாக இருந்துள்ளன. தற்போது 10 மான்கள் கூட இல்லாத நிலையில், மான்கள் குறைந்து போவதற்கு யார் காரணம்? இல்லை வேலியே பயிரை மேய்கிறதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழத்தான் செய்கிறது.



இந்நிலையில், மீதம் இருக்கும் மான்களையாவது வனத்துறை காப்பாற்றி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுமா? என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய கட்டண உயர்வு அமல்

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Vandalur Zoo New Fee Hike Implemented

 

நாட்டிலுள்ள மிகப் பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்றாகும். இந்த பூங்கா அதன் அறிவியல் மேலாண்மை நடைமுறைகளுக்குப் பெயர் பெற்றது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் 2022 ஆம் ஆண்டில் பெரிய மிருகக்காட்சி சாலை பிரிவில் அதிக மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டு மதிப்பெண்களுடன் இந்த பூங்கா நாட்டிலேயே ‘சிறந்த மிருகக்காட்சி சாலை’ என மதிப்பிடப்பட்டது. தற்போது, பூங்காவில் 170 வகைகளைச் சேர்ந்த 1977 வன விலங்குகள் உள்ளன. இந்த உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

 

அண்மையில் பூங்காவிற்கான கட்டண உயர்வு குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் இலவச நுழைவுக் கட்டண சலுகை தொடர்கிறது. 5 வயது முதல் 12 வயது வரையிலும் மற்றும் 13 வயது முதல் 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக 20 ரூபாய்  மட்டும் வசூலிக்கப்படும்.

 

இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் ஏற்கெனவே உள்ள இருவேறு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டு ஒரே மாதிரியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சக்கர நாற்காலிக்கான கட்டணம் ரூபாய் 25 ரத்து செய்யப்படுகிறது. சைக்கிள் மற்றும் ரிக்சாவுக்கு நிறுத்துமிடக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டைம் ஸ்லாட் நிறுத்துமிடக் கட்டண முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வேன், டெம்போ பயணிகள், மினி பேருந்து மற்றும் பேருந்துகளுக்கான நிறுத்தக் கட்டணம் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவுக் கட்டணம் ரூபாய் 115லிருந்து ரூபாய் 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனக் கட்டணம் ரூபாய் 100லிருந்து ரூபாய் 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சஃபாரி வாகனக் கட்டணம் ரூபாய் 50லிருந்து ரூபாய் 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ ஒளிப்பதிவு (Video camera) கட்டணம் ரூபாய் 500லிருந்து ரூபாய் 750 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உயர்த்தப்பட்ட புதிய கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதே சமயம் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் எனப் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

 

Next Story

வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவுக் கட்டணம் உயர்வு

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Vandalur Zoo Entry Fee Hike

 

நாட்டிலுள்ள மிகப் பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்றாகும். இந்த பூங்கா அதன் அறிவியல் மேலாண்மை நடைமுறைகளுக்கு பெயர் பெற்றது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் 2022 ஆம் ஆண்டில் பெரிய மிருகக்காட்சி சாலை பிரிவில் அதிக மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டு மதிப்பெண்களுடன் இந்த பூங்கா நாட்டிலேயே "சிறந்த மிருகக்காட்சி சாலை" என மதிப்பிடப்பட்டது. தற்போது, பூங்காவில் 170 வகைகளை சேர்ந்த 1977 வன விலங்குகள் உள்ளன. இந்த உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

 

இந்நிலையில் பூங்காவிற்கான கட்டண உயர்வு குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தற்போது அளிக்கப்பட்டு வரும் இலவச நுழைவு கட்டண சலுகை தொடர்கிறது. 5 வயது முதல் 12 வயது வரையிலும் மற்றும் 13 வயது முதல் 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக 20 ரூபாய்  மட்டும் வசூலிக்கப்படும்.

 

இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் ஏற்கெனவே உள்ள இருவேறு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டு ஒரே மாதிரியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சக்கர நாற்காலிக்கான கட்டணம் ரூபாய் 25 ரத்து செய்யப்படுகிறது. சைக்கிள் மற்றும் ரிக்சாவுக்கு நிறுத்துமிடக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டைம் ஸ்லாட் நிறுத்துமிடக் கட்டண முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வேன், டெம்போ பயணிகள், மினி பேருந்து மற்றும் பேருந்துகளுக்கான நிறுத்தக் கட்டணம் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவுக் கட்டணம் ரூபாய் 115 லிருந்து ரூபாய் 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனக் கட்டணம் ரூபாய் 100 லிருந்து ரூபாய் 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சஃபாரி வாகனக் கட்டணம் ரூபாய் 50 லிருந்து ரூபாய் 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ ஒளிப்பதிவு (Video camera) கட்டணம் ரூபாய் 500 லிருந்து ரூபாய் 750 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.