Skip to main content

''ஏமாற்றப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் இதை செய்தாக வேண்டும்'' - டி.ஜி.பி சைலேந்திரபாபு பேட்டி

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

nn

 

ஆன்லைன் மற்றும் இணையதள மோசடி குறித்து அவ்வப்போது தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் டெலிகிராம் மோசடி குறித்து சைலேந்திரபாபு பேசியிருந்தார்.

 

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சைலேந்திரபாபு, ''நாம் இதுவரை சந்திக்காத பல்வேறு புதுப்புது குற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டிலிருந்து மொபைல் போன் மூலம் உங்களை காண்டாக்ட் செய்து எளிதில் உங்களிடம் உள்ள பணத்தை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். தொழில் அதிபர்களிடம் திருடி இருக்கிறார்கள்; அரசு ஊழியர்களை உயரதிகாரிகள் பேசுவதாக பேசி மெசேஜ் கொடுத்து பணத்தை திருடி இருக்கிறார்கள்; திருமண வரன் பார்க்கக்கூடிய பெண்களை குறி வைத்து வரன்கள் என வெளிநாட்டிலிருந்து பேசி பல லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 

 

தொழில் தொடங்கக்கூடிய முனைவில் இருக்கக்கூடிய இளைஞர்களை தொடர்பு கொண்டு, ‘இந்த மாதிரி தொழில் இருக்கிறது. இந்த பொருளை வாங்கி அனுப்புங்கள்,. ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய பொருளை வாங்கி எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் இரண்டு லட்சம் ரூபாய் தருவோம்’ என்று சொல்லி பல லட்சம் ரூபாய் ஏமாற்றி உள்ளார்கள்; வேலை தேடி அலையக்கூடிய இளைஞர்களை தொடர்பு கொண்டு வெளிநாட்டில் நல்ல வேலை இருக்கிறது என்று சொல்லி சில லட்சங்களை முதலீடு செய்யச் சொல்லி திருடக்கூடிய பல கும்பல்கள் இருக்கிறது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

 

இதற்காக காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை நீங்கள் உங்கள் பணத்தை விட்டு விட்டீர்கள் என்றால் தயவு செய்து உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் சென்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து உங்களுடைய ஃபோன் காலை எடுத்து உங்கள் பணத்தை இன்னொரு வங்கிக்கு ட்ரான்ஸ்பர் ஆகாமல் பாதுகாத்துக் கொடுத்து விடுவார்கள். ஆனால் அதனை நீங்கள் 24 மணி நேரத்திற்குள் செய்தாக வேண்டும்.

 

37 மாவட்டங்களிலும் சைபர் கிரைம் யூனிட்ஸ் இருக்கிறது. 9 மாநகர காவல் ஆணையகங்களில் சைபர் குற்றப்பிரிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தேசிய அளவில், சர்வதேச அளவில் குற்றங்களை கண்டுபிடிக்க சிபிசிஐடி யூனிட் ஆரம்பித்திருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக மாநில சைபர் கட்டுப்பாட்டு மையம் இருக்கிறது. சர்வதேச அளவிலான குற்றங்கள், வெளிநாடுகளில் இன்டர்நேஷனல் போலீஸ் சம்பந்தப்பட்ட குற்றங்களில் அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் பணத்தை ரெக்கவர் செய்வதற்கான அமைப்புகள் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் சைபர் குற்றங்களில் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள் என்றால் உடனடியாக நீங்கள் கூப்பிட வேண்டியது 1930'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.