Skip to main content

அதிமுக ஆட்சியில்தான் அப்படி என்றால், திமுக ஆட்சியிலும் அதேதான்" - உதகை மக்கள் வேதனை!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

If that is the case in the AIADMK regime, then it is the same in the DMK regime "

 

உதகை அருகே உள்ள நடுட்டம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் வழியில் உள்ள டெர்ரஸ்டேட் செல்லும் பாதையில் தலித் மக்களுக்கான 350க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்திற்கு அரசு பட்டா வழங்கியுள்ளது. இந்தப் பட்டா நிலத்தில் மக்கள் செல்வதற்கு பொது பாதை இருந்து வந்துள்ளது. அந்தப் பாதையில் மக்கள் சென்று தங்களுடைய விவசாயத்தையும் பார்த்து வந்தனர். 

 

இந்த நிலையில், சிலர் விவசாயம் செய்து போதிய லாபாம் ஈட்ட முடியாத சூழ்நிலையால் நிலத்தின் பட்டாவை வைத்து கடன்பெற்று விவசாயம் செய்தனர். அதில் மேலும் நஷ்டம் அடைந்து, கடன் தொல்லையால் அந்த இடங்களை கடன் வாங்கியவர்களிடமே விட்டுச் சென்றுள்ளனர். அதைப் பயன்படுத்தி இதையே கூட்டு பட்டா பெயரில் அந்த இடத்தை தாசில்தார் உதவியால் பெரும் முதலைகளின் பெயரில் மாற்றப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து இதே பாணியில், மீதமுள்ள இந்த மக்களை விரட்டி அடிக்கவே, முதலில் அந்தப் பகுதிக்குச் செல்லும் பேருந்தை போதிய வருமானம் வரவில்லை என்று நிறுத்தியுள்ளனர்.

 

If that is the case in the AIADMK regime, then it is the same in the DMK regime "

 

அதேபோல பொது சாலையை அங்குள்ள வனத்துறை அதிகாரிகள் உதவியுடன், சாலையில் ஆணியைப் பதித்து யாரும் செல்லமுடியாத அளவிற்கு, இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது என பிரச்சினை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் போராட்டங்கள் செய்தும் இதுவரையிலும் எந்தப் பயனும் இல்லை  என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இது தொடர்பாக  உதகை விவசாய சங்கச் செயலாளர் கிருஷ்ணன் கூறுகையில், “எங்கள் இடத்தை அபகரிக்கவே இந்தச் சாலையை வனத்துறைக்குச் சொந்தமானது என பிரச்சினை செய்து எங்களை நிலத்திற்குச் செல்லவிடாமல் அடிப்பது, மரங்களை வெட்டிவிட்டோம் என பொய் புகார் போடுவது, நிலத்தினுள் பம்பு செட்டுகளை உடைப்பது என அராஜகத்தின் உச்சத்திற்கு செல்கின்றனர் . 

 

இதை மாவட்ட ஆட்சியரிடம் சொன்னால் கண்டுகொள்ளவதே இல்லை. இந்த சாலை ரெவூன்யூவுக்கு சொந்தமானது. ஆனால் வனப்பகுதிக்கு சொந்தம் என்று எந்த அரசு உத்தரவுமின்றி இவர்களே வைப்பது, இதைக் கேட்க வேண்டிய தாசில்தார், மாவட்ட ஆட்சியர் அனைவரும் வனத்துறைக்குத் துணை நின்று கூட்டுக் களவாணிகளாக இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியின் நிலைதான் இப்படி நடந்தது என்றால், திமுக ஆட்சிக்கு வந்தும் இதே அராஜகத்தையே செய்கின்றனர். இந்த அரசு எங்களுக்கு இந்தச் சாலையை பெற்றுத் தர வேண்டும்” என்றார். மேலும், “அந்த இடம்  உண்மையிலே  வனப் பகுதிக்கு சொந்தமானது என்றால், அந்த நிலத்திற்கான பாதை இல்லாமல் அரசு எப்படி இந்த மக்களுக்கு பட்டா நிலத்தைக் கொடுத்திருக்கும். 

 

அதே பாதையில் எப்படி அரசு பேருந்து சென்றிருக்க முடியும். அந்த மக்கள் எந்தப் பாதையில் சென்று விவசாயம் செய்திருக்க முடியும் என்ற கேள்வியை தாசில்தார் குப்புராஜிடம் முன்வைத்தோம். அதற்கு அவர், ‘நான் கரோனா பணியில் இருக்கிறேன். என்னால் பேச முடியாது’ என தொடர்பை துண்டித்துவிட்டார். மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் கேட்டபோது, ‘இது தொடர்பாக எந்தத் தகவலும் எனக்குத் தெரியவில்லை, இனி அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சாதாரணமாக கூறினார்" என கிருஷ்ணன் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.