ADVERTISEMENT

கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் ஐ.சி.எம்.ஆர் மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர்!

05:11 PM Jan 19, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவிவரும் சூழலில் பல நாடுகள், முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சில தினங்களாக முதற்கட்டமாக 166 மையங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கிடையே ஐ.சி.எம்.ஆர் மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT