Skip to main content

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

IAS officers ordered to submit property details!

 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் மூலமாக இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அனைத்துத்துறை செயலாளர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரும் ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளில் ஒன்றுதான் 1968 இந்திய ஆட்சிப் பணியாளர்கள் சட்டத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 400க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளனர். சரியான காரணங்கள் இன்றி சொத்து விவரங்களை சமர்ப்பிக்காமல் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எனவே ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆன்லைனில் சொத்துவிவரங்ளை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கடந்த அக்டோபர் மாதம் இதேபோல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்பை வழங்கிய கூடுதல் தலைமைச் செயலாளர் (படங்கள்)

Published on 01/04/2024 | Edited on 01/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு, ஒவ்வொரு கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், இன்று (01-04-24) காலை 11.30 மணி அளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வேப்பேரி ரித்தர்டன் சாலையில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளை பார்வையிட்டு பூத் ஸ்லிப் வழங்கினார்.