Skip to main content

அரசு மருத்துவமனை எக்ஸ்ரே இயந்திரத்தை கடத்த முயற்சித்தால் மக்களை திரட்டி போராடுவேன்: திமுக எம்.எல்.ஏ. மெய்யநாதன் 

Published on 03/05/2018 | Edited on 03/05/2018
sm

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு வாங்கப்பட்டுள்ள புதிய ரூ.50 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரத்தை கடத்த முயற்சித்தால் மக்களை திரட்டி போராடுவேன் என்று திமுக எம்.எல்.ஏ மெய்யநாதன் சுகாதாரதுறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  

 புதுக்கோட்டையில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி பெயரால் தொடங்கப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை நல்ல முறையில் செயல்பட்டு வந்த நிலையில் மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டதும் நகரின் மையப்பகுதியில் இருந்த  மாவட்ட மருத்துவமனைக்கு மூடுவிழா நடத்தப்பட்டு முதல் பெண் மருத்துவரின் பெயரும் மறைக்கப்பட்டு வருகிறது.
   அதனால் மாவட்ட மருத்துவமனையாக ஆலங்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் ஆலங்குடி தொகுதி திமுக வசம் உள்ளதால் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது. அதனால் அறந்தாங்கிக்கு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்வதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அங்கு உள்ள சமஉ வும் அமமுக ரெத்தினசபாபதி என்பதால் அறந்தாங்கியிலும் அதற்கான பணிகள் நடக்கவில்லை. 


   இந்த நிலையில் ஆலங்குடி சுற்றியுள்ள சுமார் 200 கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு உடல்நலக் கோளாறு என்றால் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சமீப காலமாக போதிய மருத்துவ உபகரணங்களும் மருத்துவர்கள், செவிலியர்கள் டெக்னீசியன்கள் இல்லாமல் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரையும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அங்கு சரியான கவணிப்புகள் இல்லை என்ற குற்றச்சாட்டகள் எழுந்ததால் ஆலங்குடி அரசு மருத்துவமனையை சீரமைக்க வேண்டும் மருத்துவ கருவிகள் வழங்க வேண்டும் என்று ஆலங்குடி திமுக சமஉ மெய்யநாதன் உள்பட கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.


இந்த நிலையில் கடந்த ஒரு மாதம் முன்பு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் உள்பட பல இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய இயந்திரம் வைப்பதற்காக ஒரு கட்டிடத்தில் தனி அறை வண்ணம் தீட்டப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருந்த நிலையில் விலை உயர்ந்த அந்த இயந்திரத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல சுகாதார துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 


இந்த நிலையில் இன்று ஆலங்குடி திமுக எம் எல் ஏ மெய்யநாதன் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்த  பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது.. ஆலங்குடி அரசு மருத்துமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன் ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மறுத்துவிட்டார்கள். ஆனாலும் தொகுதி மக்கள் பயனடைய வேண்டும் என்று மருத்துவர்கள், உபகரணங்கள், வேண்டும் என்றும்  ஆள்பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும என்றும் கோரிக்கை வைத்தேன். அதன் பிறகு ரூ.50 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இப்போது அதை வேறு இடத்திற்கோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ கடத்தி செல்ல திட்டமிட்டள்ளனர். ஆகவே தான் இன்று ஆய்வு செய்தேன். இந்த இயந்திரத்தை சில நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தி திறக்க வைப்போம் என்றவர்.
 

  புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்கு விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக கொண்டு சென்றால் அலட்சியமாக செயல்படுவதால் சில நாட்களுக்குள் பல உயிர்கள் போயுள்ளது. பார்த்திபன் என்ற போலிஸ்காரருக்கே உரிய சிகிச்சை இல்லை என்பதால் நல்ல இளைஞரின் உயிர் போய்விட்டது. இந்த அலட்சிய போக்கை சுகாதாரதுறை அமைச்சர் கவணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் ஆலங்குடிக்கு வந்துள்ள இயந்திரத்தை வேறு ஊருக்கு வந்தது மாற்றி இறக்கிவிட்டதாக காரணம் சொல்ல தயாராகி உள்ளார்கள். இன்னும் சில நாட்களில் சுகாதார துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தான் என்றார். 


    

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.