Skip to main content

’’தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடந்தால் தடுத்து நிறுத்துவோம்’’ - சீமான் பேச்சு

Published on 06/04/2018 | Edited on 06/04/2018

 

karaikkal


" திமுக செயல்தலைவர் ஸ்டாலின்  காவேரி உரிமை மீட்பு நடைபயணம் செய்யப்போவது வேடிக்கையாக உள்ளது. ஆட்சிக்கு  திமு,க காங்கிரஸ் வந்தால், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிடுமா "  என்று சீமான் காரைக்கால் துறைமுகத்திற்கு எதிராக நடந்த போராட்டத்திற்கு பிறகு கூறினார்.

 

நாகை மாவட்டம் நாகூருக்கும், காரைக்கால் வாஞ்சூருக்கும் இடையில் மார்க் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. துறைமுகத்தில் அனுமதிக்கு புறம்பாக நிலக்கரி, ரசாயனங்கள் இறக்குமதி செய்வதால், அதனை சுற்றியுள்ள பத்துக்கும் அதிகமான கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றன. 

 

அங்குள்ள மக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிவருகின்றனர். அதோடு புரதான நாகூர் தர்காவும் பொலிவிழந்தே காணப்படுகிறது. மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குவதை தடை செய்யவேண்டும் என பல போராடங்களை அந்த பகுதிமக்கள் நடத்திவிட்டனர். தமிழ்நாடு - புதுச்சேரி இரு மாநில அரசுகளும் செவிசாய்க்கவில்லை. 

 

நாகப்பட்டினத்திற்கு ஆய்வு செய்யவந்த தழிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித்துக்கு முன்னாள் எம்,எல்,ஏ நிஜாமுதின் நிலக்கரியால்  மாலை அணிவித்து எதிர்ப்பை பதிவு செய்யப்போவதாக முயன்று கைதானார்.

 

இந்தநிலையில் நாகை எம்,எல்,ஏ வும், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவருமான தமிமுன் அன்சாரி தலைமையில் இன்று 6 ம் தேதி மாலை 5 மணிக்கு துறைமுகம் முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான், இயக்குனர் கெளதமன், நாகை முன்னால் எம்,எல்,ஏ நிஜாமுதின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், " காவிரி விவகாரத்திற்காக ஸ்டாலின் நடைபயணம் போகப்போவது வேடிக்கையாக இருக்கு. தமிழகத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரசும் ஆட்சிக்குவந்தால் மேலாண்மை வாரியம் அமைந்துவிடுமா. தமிழகத்தில் கிரிக்கெட் விளையாடுங்கள். ஆனால், விவசாயிகளின் வயிற்றில் விளையாடாதீர்கள் ஆகையால் IPLபோட்டி நடந்தால் கண்டிப்பாக தடுத்து நிறுத்துவோம்.

 

 காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதை தடை செய்யவேண்டும், இல்லை என்றால்  அடுத்தகட்டமாக கடல்வழி போராட்டம் நடத்துவோம்," என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.