Skip to main content

விவசாயிகளின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்பேன்; நாகை சிபிஐ வேட்பாளர் பேட்டி

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

விவசாயத்தை  அழிக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை டெல்டா மாவட்டங்களில் தடுத்து நிறுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்கிறார் நாகை தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளரான செல்வராசு.

 

 

நாகை நாடாளுமன்ற (தனி)தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராசு  போட்டியிடுகிறார். அவரை கடந்த 20 ம் தேதி திருவாரூரில், அக்கட்சியின் தலைவர் முத்தரசன், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அறிமுகம் செய்து பிரச்சாரத்தை துவங்கிவைத்தனர்.

 

cpm

 

இந்தநிலையில் இன்று நாகையில் பிரச்சாரத்தில் இருந்தவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,அதில், " விவசாயத்தை அழிக்க கூடிய ஹைட்ரோ கார்பன், மீத்தேன்,  ஷெல்கேஸ் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை டெல்டா மாவட்டங்களில் தடுத்து நிறுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். எப்போதுமே எங்களின் நிலைபாடு விவசாயிகளின் நலன் என்பதாக இருக்கும் என்பதால், நிச்சயமாக விவசாயிகளின் வாக்கு தங்களுக்கே கிடைக்கும். அதேபோல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வாக்குகளும், வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் வாக்குகளும், பாஜக அரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளும் தங்களுக்கே கிடைக்கும், இதன்மூலம் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்." என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.