Skip to main content

வெற்றி பெறும்வரை காலில் செருப்பு அணியமாட்டேன் – திமுக பிரமுகரின் சபதம்

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது வீரளுர் கிராமம். இந்த கிராமத்தில் திமுக ஊராட்சி செயலாளராக இருப்பவர் காளியப்பன். 41 வயதான காளியப்பன், 7வது வரை மட்டும்மே படித்துள்ளார், ஊரில் விவசாயியாக உள்ளார். திமுக, உதயசூரியனை யாராவது தப்பா பேசிவிட்டால் மன்னிப்பு கேட்கும் வரை சண்டைப்போடுவார், அந்தளவுக்கு தீவிர விசுவாசி.

கலசப்பாக்கம் தொகுதியில் ஒருக்காலத்தில் திமுகவின் கோட்டையாக இருந்தது. அதிமுகவின் முதல்வராக இருந்த எம்.ஜீ.ராமச்சந்திரனை சட்டமன்றத்தில் கேள்விகள் எழுப்பி திக்கு முக்காடவைத்த பெ.சு.திருவேங்கடம் நின்று தொடர்ச்சியாக வெற்றிபெற்ற தொகுதியிது. 2001 முதல் இந்த தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னமே வெற்றிபெற்று வருகிறது.

 

 I will not wear sandals on my feet until I win


2001 - 2006ல் அதிமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரன், 2006 – 2011 வரை அதிமுக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, 2011 – 2016 வரை மீண்டும் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, 2016 முதல் தற்போது வரை அதிமுக பன்னீர்செல்வம் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். கடந்த நான்கு சட்டமன்ற தேர்தல்களாக திமுக இந்த தொகுதியில் நேரடியாக போட்டியிடவில்லை.
 

கடந்த 2001 சட்டமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியை சந்தித்தார். 2006ல் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது, 2011, 2016 தேர்தல்களில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டு எதிர்த்து நின்ற அதிமுகவே வெற்றி பெற்றது.

2011 சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியின்போது அதிமுகவினர், திமுகவினரை கிண்டல் செய்து, நீங்க ஜெயிக்க முடியாது என நக்கலடித்துள்ளனர். வீரளுர் பகுதி அதிமுகவினரும் திமுகவினரை கிண்டல் செய்துள்ளனர். திமுக கிளை செயலாளர் காளியப்பன், தன்மானத்தோடு, இந்த கலசப்பாக்கம் தொகுதியில் திமுகவை சேர்ந்த ஒருவர் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏவாகும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என சபதம்மெடுத்து கடந்த 9 வருடமாக செருப்பு போடாமல் நடந்து வருகிறார்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் கோட்டை எனப்படும் கலசப்பாக்கத்தில் திமுக வெற்றி சேர்மனாக திமுகவை சேர்ந்த ஒரு பெண்மணி பதவியில் உள்ளார். துணை தலைவராகவும் திமுகவை சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக மெஜாரிட்டியாக இருந்த நிலையில் திமுக தேர்தல் பொறுப்பாளர் கம்பன் முயற்சியால் திமுக வெற்றி பெற்றுள்ளது. கலசப்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார் காளியப்பன். அவர் வெற்றி பெற்ற நிலையிலும் தற்போதும் காலில் செருப்பு அணியாமலே நடந்து வருகிறார்.

​இதுப்பற்றி அவரிடம் பேசியபோது, இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டு உதயசூரியனை மக்கள் வெற்றி பெற வைக்கும் வரை செருப்பு அணியமாட்டேன் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.