Skip to main content

''உதயநிதி ஸ்டாலின் வந்தால்தான் கீழே இறங்குவேன்''-செல்ஃபோன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு!

Published on 27/06/2021 | Edited on 27/06/2021

 

 "I will go down only if Udayanidhi Stalin comes" - the woman who climbed the cell phone tower

 

பூவிருந்தவல்லி அருகே தற்கொலை செய்துகொள்ள செல்ஃபோன் டவர் மீது ஏறிய பெண் ஒருவர் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் வந்தால்தான் கீழே இறங்குவேன் என அடம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும் அவருடைய மனைவி ராஜிலாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். கன்னியாகுமரியில் வசித்து வந்த ராஜிலா அண்மையில் திரும்பவும் திருவேற்காடு வந்து கணவனிடம் பணத்தையும் நகையையும் வழங்கும்படி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதனையடுத்து பூவிருந்தவல்லியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகாரளிக்க வந்துள்ளார் ராஜிலா. அப்பொழுது புகாரை போலீசார் பெறுவதற்கு காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியின் உச்சிக்கு சென்ற ராஜிலா காவல் நிலையத்தின் அருகே இருந்த 200 அடி உயர செல்ஃபோன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விட்டார்.

 

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரை கீழே இறங்கும்படி பலமுறை கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ராஜிலா, திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் வந்தால் மட்டுமே கீழே இறங்குவதாக தெரிவித்தார். இதனையடுத்து பூவிருந்தவல்லி நகர திமுக செயலாளர் ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து தன்னை உதயநிதி ஸ்டாலின் தான் அனுப்பியுள்ளதாகவும், உங்களிடம் காணொளி மூலம் அவர் உரையாட தயாராக இருக்கிறார் எனவும் கூறியதையடுத்து அந்தப் பெண் கீழே இறங்கினார். இந்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.