Skip to main content

“உனக்கு வேலை தர்றேன், அதுக்கு தகுந்த பணமும் தர்றேன்” - இளம்பெண்களை சீரழித்த மூதாட்டி!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

"I will give you a job, and I will give you the money you deserve" - the old woman

 

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கே.புங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி என்ற பாக்கியசெல்வி (வயது 70). கணவரைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார். இவர் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் புரோக்கராக வேலை பார்த்துவருகிறார். இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை கேட்டுவரும் இளம்பெண்கள் மற்றும் குடும்பப் பெண்களிடம் ‘உனக்கு வேலை தர்றேன், அதுக்குத் தகுந்த பணமும் தர்றேன்’ என  பணத்தாசை காட்டி, தனது வலையில் சிக்கவைத்து, பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

 

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் இளம்பெண்கள் மற்றும் குடும்பப் பெண்களை இதே மாதிரி பயன்படுத்தி, இத்தொழிலில் ஈடுபடுத்திவந்துள்ளார். இதற்காக தனது வீட்டினை விபச்சாரத்திற்கு ஏற்ற வகையில் அறைகளைத் தயார் செய்தும் வைத்திருக்கிறார். இந்நிலையில், நேற்றைய தினம் காரமடை அருகே உள்ள தொட்டிபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், குடும்பப் பிரச்சினை காரணமாக சில நாட்களாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளார். அவரிடம் பாலியல் தொழில் செய்யும் புரோக்கரான பாக்கியலட்சுமி, தன்னிடம் இளம்பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். அதற்கு முன்பணமாக ஆயிரம் ரூபாய் கொடு என கேட்டுள்ளார்.

 

இதனையடுத்து அந்த இளைஞர், தன்னிடம் பணம் இல்லை, அருகில் உள்ள ஏடி.எம்.மில் இருந்து பணம் எடுத்துவருவதாக கூறி அவ்விடத்தைவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார். அவர்  காரமடை காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்க, காரமடை காவல்துறையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து விபச்சாரக் கும்பலை மடக்கிப் பிடித்தனர். அப்போது அந்த வீட்டில் இளம்பெண்கள் இருந்ததைத்  தொடர்ந்து, இதனை நடத்திவந்த 70 வயதான பாக்கியலட்சுமி என்ற மூதாட்டியைக் கைதுசெய்ய சென்றனர். அப்போது, தன்னைப் பிடித்தால் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கொள்வேன் என மிரட்டியுள்ளார். பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த மூதாட்டியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி காரமடை காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்குப் பதிவுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.

 

மேலும், அவ்வீட்டில் இருந்த 5 இளம்பெண்களை மீட்டு கோவையில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர். இந்த தகவலறிந்த செய்தியாளர்கள், காரமடை காவல் நிலையத்திற்கு வந்து பெண் புரோக்கரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது புகைப்படம் எடுத்தனர். அப்போது புரோக்கர் பாக்கியலட்சுமி அருவருக்கத்தக்க வகையில் “என்னையா ஃபோட்டோ எடுக்கிறீங்க? நான் யார் தெரியுமா?” என ஆரம்பித்து  தகாத வார்த்தையால் திட்டித் தீர்த்தார். இந்த வயதில் பிறரின் ஏழ்மையைப் பயன்படுத்திப் பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டு, எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் ஹாயாக காரில் ஏறிச் சென்றார் அந்த 70 வயது மூதாட்டி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.