Skip to main content

“தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு பகுதியை பள்ளியின் வளர்ச்சிக்கு தந்து உதவுவேன்..” - அமைச்சர் ஐ. பெரியசாமி உறுதி

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

"I will donate a portion of the block development fund to help the development of the school." - Minister I. Periyasamy

 

குட்டத்துப்பட்டி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 7 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ. சிஸ்டத்தை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்துவைத்தார். 

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், குட்டத்துப்பட்டி ஊராட்சியில் உள்ள இந்த மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய செல்வி சுதாமேரி நிதியில் சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ. பிளான்ட் சிஸ்டம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு குட்டத்துப்பட்டி பங்குத் தந்தை ஜான் நெப்போலியன் தலைமை தாங்கினார். 

 

தலைமை ஆசிரியர் லெட்சுமிகாந்த பாரதி வரவேற்று பேசினார். மாவட்ட ஆட்சியர் விசாகன், திட்ட இயக்குநர் தினேஷ் குமார், ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, துணைப் பெருந்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.ஓ. சிஸ்டம் பிளான்டை துவக்கிவைத்த அமைச்சர் ஐ. பெரியசாமி நிகழ்ச்சியில் பேசியதாவது, “கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவரும் இந்த காலத்தில், இந்தப் பள்ளியில் மட்டும் சுமார் 700 பேர் படிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதற்குக் காரணம் அங்குள்ள ஆசிரியர்களின் அயராத உழைப்பே. 

 

"I will donate a portion of the block development fund to help the development of the school." - Minister I. Periyasamy

 

ஆரம்பத்தில் இப்பள்ளி தொடக்கப்பள்ளியாக இருந்த காலம்முதல் படிப்படியாக உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்துள்ளது. பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மற்றும் எம்.பி. நிதி உட்பட பல்வேறு நிதிகளை வழங்கியதால் இன்று பள்ளியில் சிறப்பான வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள் அமைந்துள்ளன; மாணவர்களும் சிரமமின்றி கல்வி கற்க முடிகிறது. இவ்வருடமும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு பகுதியை ஒதுக்கி பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவேன்” என்று கூறினார்.

 

நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் தண்டபானி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, அண்ணாதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்