Skip to main content

''நடந்துதான் பள்ளிக்கு வருவேன்; அதற்கான காரணத்தை இப்போது சொல்ல முடியாது'' - நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட மு.க. ஸ்டாலின்

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மேல்நிலைப் பள்ளியில் இன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற முறையில் கலந்து கொண்டார். நிகழ்வின் மேடையில் பேசிய தமிழக முதல்வர், ''மாணவப் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம். இந்த மாதிரியான பள்ளிக் காலத்தில்தான் நாம் மகிழ்ச்சியோடு இருந்தோம். அத்தகைய பள்ளிக்காலத்தில் எப்படி எல்லாம் துள்ளித் திரிந்தோம் என்பதை எல்லாம் நான் நினைத்து நினைத்துப் பார்த்தேன்.

 

இந்தப் பள்ளியில் நான் படித்த பொழுது நமது தமிழாசிரியர் ஜெயராமன் சொன்னதுபோல் என்னுடைய அப்பா அன்றைக்குப் போக்குவரத்துத் துறையின் அமைச்சராக இருந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகுதான் முதலமைச்சராக வருகிறார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது நான் எந்த பந்தாவும் இல்லாமல் ஒரு அமைச்சருடைய மகனாக நடந்து கொள்ளவில்லை. நான் மட்டுமல்ல நான் அப்படி நடந்து கொள்வதை என்னுடைய தலைவர், என்னுடைய தந்தை கலைஞரும் விரும்பமாட்டார். இதெல்லாம் என்னுடன் படித்தவர்களுக்குத் தெரியும். என்னுடைய ஆசிரியர்களுக்கு இது தெரிந்திருக்கிறது என்றால் என் கூட படித்தவர்களுக்கும் இது தெரியும்.

 

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நான் கோபாலபுரத்தில் இருந்தபோது அமைச்சரின் மகனாக இருந்தும் பள்ளிக்கூடத்திற்கு பேருந்தில்தான் வருவேன். சில நேரங்களில் சைக்கிளில் வந்திருக்கிறேன். வீட்டிலிருந்து ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ் வரை நடந்து வந்து பல்லவன் போக்குவரத்து கழகத்தின் '29 சி' என்ற பேருந்தைப் பிடித்து அந்த பஸ்ஸில் ஏறி ஸ்டெர்லிங் ரோட்டில் வந்து இறங்கி, அங்கிருந்து மூன்று, நான்கு கிலோமீட்டர் நடந்துதான் பள்ளிக்கு வருவேன். நடந்து வருவதற்குப் பல காரணங்கள் உண்டு அதெல்லாம் இப்பொழுது சொல்ல முடியாது. அதெல்லாம் பழைய நினைவுகள். அப்படித்தான் இந்த பள்ளிக்கூடத்துக்கு நான் வந்து சென்றேன். அதுதான் என்னுடைய உண்மையான இயல்பு. அதே மாதிரி தான் இப்பொழுதும் இங்கே நான் முதல்வராக வரவில்லை என்று சொன்னேன்.

 

உங்கள் நண்பராகத்தான் வந்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் எனக்கு இந்த செக்யூரிட்டி போன்ற பாதுக்காப்பு முறைகள் எல்லாம் இல்லை என்றால், அவர்கள் ஒத்துக் கொண்டால் நிச்சயமாக நான் பஸ் அல்லது சைக்கிளில்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கணும். ஆனால் செக்யூரிட்டி விட மாட்டாங்க. அது உங்களுக்குத் தெரியும். மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் பெருமைப்படுகிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.