Skip to main content

’நான் திமுகவில் இருந்து சதியால் வெளியேற்றப்பட்டேன்!’-   அழகிரி பேச்சு

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

 

az

 

திண்டுக்கல் மாவட்ட அழகிரி பேரவை சார்பில் திண்டுக்கல்லில் உள்ள  தனியார் திருமண மண்டபத்தில்  கலைஞருக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.    இந்த நிகழ்ச்சிக்கு  கலைஞரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியும் அவருடைய ஆதரவாளர்களும் ஐம்பதுக்கு மேற்பட்ட கார்களில் வந்தனர்.   அவர்களை மாவட்ட பொறுப்பாளர்களான பிரேம்சந்திரன்,  பிரபாகரன், கண்ணன் ஆகியோர் மாலை சால்வை  அணிவித்து வரவேற்றனர்.   அதன் பின்  புகழ் அஞ்சலி விழா மேடையில்  பேசிய மு.க.அழகிரியோ... நான் திமுகவில் இருந்து சதியால் வெளியேற்றப்பட்டேன். தொண்டர்களுக்காக பேசியதால் வெளியேற்றப்பட்டேன். சமீப நாட்களாக திமுகவினர் பிள்ளை பிடிப்பவர்களை போல ஆட்களைப் பிடித்து கொண்டு இருக்கிறார்கள். 

 

எனக்கு ஆதரவாக வரும் திமுக தொண்டர்களை பதவி ஆசை காட்டி அழைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் என்னிடம் இருக்கும் யாரும் பதவிக்காக அலைபவர்கள் அல்ல. சமீபத்தில் இரண்டு பேர் போனார்கள். நெப்போலியன் என சொல்லிக்கொள்ளும் கருப்பசாமி பாண்டியன் மிகப்பெரிய கோழை.

 

az


 ஒருமுறை சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கருப்பசாமி பாண்டியன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது நானும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே. பி. ராமலிங்கமும் சிறையில் சென்று அவரை சந்தித்தோம். அப்போது ஓவென கதறி அழுதார். குடும்பத்தை விட்டு சிறையில் இருக்கிறேன் எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என கண்ணீர் விட்டு அழுதார். சிறைக்கு பயந்தவன் திமுக காரணமாக இருக்க முடியாது. அப்படிப்பட்ட  கருப்பசாமி பாண்டியன் போனதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.


நான் இங்கு அரசியல் பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இங்கு பேசியவர்கள் கலைஞரோடு என்னை ஒப்பிட்டு பேசினார்கள். அதனால் பேசுகிறேன். கலைஞரின் ஆற்றல், திறனுக்கு  நான் ஒப்பானவன் இல்லை. என்றாலும் அவரிடமிருந்து சுயமரியாதை மற்றும் உழைப்பைக் கற்றுக் கொண்டேன்.


  இன்று திருமங்கலம் பார்முலா என குறிப்பிடுகிறார்கள். இடைத்தேர்தல்களில் உங்கள் உழைப்புடன் நான் இணைந்து செய்த பணி திமுகவுக்கு வெற்றி பெற்றுத்தந்தது. அதை இன்று மறந்துவிட்டார்கள். 
செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. மாற்றத்திற்கான வேளை வந்து கொண்டிருக்கிறது. அதுவரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். விரைவில் தேர்தல் வரும். அப்போது நமது திறமையை காட்டுவோம். தேர்தல் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நான் அப்போது தெரிவிப்பேன். அதுவரை அமைதியாக இருங்கள் என்று  கூறினார்.

 இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ திண்டுக்கல் மணிமாறன், ரெட்டியார் சத்திரம் தம்பிதுரை உள்பட சிலரும் அழகிரி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக கூட்டணி வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்த அழகிரி ஆதரவாளர்! 

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

Alagiri supporter who made the DMK alliance candidate lose the deposit!

 

தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (22ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, 21 மாநகராட்சி அனைத்திலும் திமுக முன்னிலை வகித்துவருகிறது. 138 நகராட்சியில் திமுக கூட்டணி 128 நகராட்சிகளிலும், அதிமுக 6 நகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. 489 பேரூராட்சிகளில், திமுக கூட்டணி 358 பேரூராட்சிகளிலும், அதிமுக 24 பேரூராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. 

 

அதேபோல், மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 26 வார்டுகளில் திமுகவும், 7 வார்டுகளில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில், மதுரை 47வது வார்டில் அழகிரியின் தீவிர ஆதரவாளர் முபாரக் என்பவரின் மனைவி பானு சுயேட்சையாக போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர், 4,561 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மேகளா மற்றும் அதிமுக வேட்பாளர் ரூபினி ஆகியோர் டெபாசிட் இழந்தனர்.    

 


 

Next Story

பழையபடி ஆரம்பிச்சுடாய்ங்கப்பா... மதுரையில் சர்ச்சை போஸ்டர்

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

புலம்பும் திமுக உடன்பிறப்புகள் மதுரையில் எப்பவுமே வித விதமான வாசகங்களில் போஸ்டர் அடிப்பதில் அசத்துவர்கள் அழகிரி விசுவாசிகள் அது சிலநேரம்  வேடிக்கையாகவும் இருக்கும் அதே சமயத்தில் கட்சிக்குள் பெரிய கிளேபாரத்தையும் ஏற்படுத்திவந்த நிலையில் ஸ்டாலினுக்கு எதிராக அண்ணனுக்கே முடிசூட்டவேண்டும் என்று பொருள்படும் வாக்கியங்களோடு ஒட்டபட்ட போஸ்டரால்  திமுகவுக்குள் ஸ்டாலின் அழகிரி விரிசல் பெருசானது. அடுத்தடுத்து நடந்த விசயம் ஊரரிந்தது.

 

controversy poster in Madurai


தற்போது முழுவதுமாக ஒதுங்கி தன் பிறந்தநாளை கூட யாரும் வரவேண்டாம் என்ற நோக்கில் மதுரையில் இல்லாமல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். எப்பவும் விமானநிலையத்தில் அடிக்கடி பேட்டி கொடுப்பதை நிறுத்தி கொண்ட அழகிரி தற்போது உடல்நிலை சரியில்லாமல் ஓய்வு எடுத்துவந்த நிலையில் செல்லூர் அழகிரியின் தீவிர ஆதரவாளர் நாகூர் கனி மற்றும் ஆதரவாளர்களால் அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே பாடல் வரிகள் போல அண்ணே அண்ணே அழகிரி அண்ணே நம்ம கட்சி நல்ல கட்சி இப்ப ரொம்ப கெட்டுபோச்சுண்ணே என்று கிண்டல் அடிக்கும் நோக்கில் போஸ்டர் மதுரை எங்கும் ஒட்டியுள்ளது மீண்டும் திமுக வினரிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.