Skip to main content

செந்தில்பாலாஜிக்கு போட்டியாக இருப்பேன் என்பதால் நீக்கப்பட்டேன்- இதுவரை நான்குமுறை கட்சி தலைமையால் நீக்கப்பட்டவர் !

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

அரவக்குறிச்சி தொகுதியில், திமுக சார்பில் செந்தில்பாலாஜி களமிறங்கி உள்ளதால், அரவக்குறிச்சி தேர்தல் களம் பரபரப்பு நிலையை எட்டியுள்ளது. இந்தநிலையில் கரூர் திமுகவில் சீனியரான முன்னாள் நகராட்சி தலைவர் தாந்தோணி ரவி, திடீரென நீக்கப்பட்டுள்ளது, கரூர் அரசியல் கட்சியினர் இடையே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 

senthilbalaji

 

அ.தி.மு.கவில், எட்டு ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக செந்தில்பாலாஜி இருந்தபோது , கீழ்மட்ட தொண்டர்கள் முதல் அனைவரையும் தன் கையில் வைத்து இருந்ததால் திமுக வசம் இருந்த கரூர் அதிமுக வசத்திற்கு கொண்டுவந்தார் செந்தில்பாலாஜி. இதற்கு முன்பு அதிமுகவில் இருந்த சீனியர்கள் எல்லோரும் செந்தில்பாலாஜியின் அரசியல் அதிரடியில் அரசியல் பண்ண முடியாமல் இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போனார்கள். 

 

 

இதற்கு இடையில் செந்தில்பாலாஜியை அதிமுக மேல்மட்ட அரசியல் உள்ளடியில் அவரிடம் இருந்த மா.செ. அமைச்சர் பதவி என அனைத்தையும் பறிக்கப்பட்ட நிலையில் அவர் தினகரன் பக்கம் சாய்ந்து பிறகு தி.முக.வில் இணைந்த போது அவர் நடத்திய செயல்வீரர்கள் கூட்டம், தேர்தல் பிரச்சார திட்டமிடல் என அனைத்தும் திமுக கட்சியினர் மற்றும் திமுக தலைமையிடமும் பெரிய வரவேற்பையும், நம்பிக்கையையும் பெற்றிருக்கிறது. 

 

dmk

 

கரூர் மாவட்ட பொறுப்பாளர் என்கிற முறையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜோதிமணிக்கான தேர்தல் எதிர்கொள்வதற்காக அவர் தயார் படுத்திய கட்டமைப்பும், அதை அவர் நடத்தி காட்டிய விதமும் 780 தேர்தல் களப்பணியாளர்களின் தொலை பேசி எண்களை வைத்து கொண்டு அவர்களை வேலை வாங்கிய விதம் திமுக தலைமையை பிரமிக்க வைத்தது. 

 

இந்த நிலையில் தான் திமுகவின் சீனியர் கட்சிக்காரர் என்று அழைக்கும் தாந்தோணி ரவி என்கிற முன்னாள் நகராட்சி தலைவர் தீடீர் என கட்சியில் இருந்து நீக்கப்பட்டு முரசொலில் அறிவிப்பு வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

 

 

இது குறித்து கரூர் மாவட்டத்தில் உள்ள கட்சியின் சீனியரிடம் பேசினோம். அவர் கூறுகையில், 

 

தான்தோன்றிமலை நகராட்சி முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர் ரவி, கடந்த, 13ல், கரூரில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைவதற்காக கட்சிக்காரர்களை வீடு வீடாக சென்று அழைத்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த கட்சிக்காரர்கள் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜியிடம் புகார் கொடுக்கவும் அதன் அடிப்படையில் கட்சி தலைமைக்கு அவர் தகவல் சொல்லவும். அன்றைய தினமே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக, கட்சியின் நாளிதழில் வாயிலாக, தி.மு.க., செயலாளர் அன்பழகன், அறிக்கை வெளியிட்டார். 

 

dmk

 

திமுக சீனியரான தாந்தோணி ரவி கட்சியில் இருந்து நீக்கப்படுவது இது ஒன்றும் புதிது அல்ல இது நான்காவது முறை. ஏற்கனவே 1999ல் முன்னாள் எம்.பி.கே.சி.பிக்கு எதிராக தேர்தலில் வேலை செய்தார் என்கிற குற்றச்சாட்டில் நீக்கப்பட்டார். அதன் பிறகு திமுக கட்சி கூட்டத்தில் திமுக சீனியரான பரமத்தியாரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டார் என்கிற குற்றசாட்டில் நீக்கப்பட்டார். அதேபோல வாசுகி முருகேசன் மாவட்ட செயலாளராக இருக்கும் போது. அவருடைய வார்டு பெண்கள் வார்டாக மாறியது அவருடைய மனைவியை நிறுத்தினார். அப்போது சேர்மன் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது ஆனால் கூட்டணி தர்மத்தை மதிக்காமல் காங்கிரஸ் சேர்மன் வேட்பாளருக்கு எதிராக சுயேச்சைக்கு ஆதரவாக இவர் வேலை செய்தார் என்பதால் நீக்கப்பட்டார். 

 

 

தற்போது அவர் அதிமுக இணைவதாக இருந்த தகவல் வந்தால் நீக்கப்பட்டார். ஒவ்வொரு தேர்தலுக்கும் தாந்தோணி ரவி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி நீக்கப்படுவார் என்றார். 

 

இது குறித்து நாம் முன்னாள் நகராட்சி தலைவர் ரவியிடம் கேட்ட போது, "கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழில், நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்துள்ளது என, நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். செந்தில் பாலாஜிக்கு போட்டியாக இருப்பேன் என்று கருதியே, என்னை நீக்கி உள்ளார். அதிமுகவில் இருந்து வந்த செந்தில்பாலாஜியை நம்பி கட்சி தலைமை இருக்கிறது. ஒருவேளை இந்த தேர்தலில் எம்.பி தேர்தலில் தோற்றும் சட்டமன்ற தேர்தலில் செந்தில்பாலாஜி தோற்றுபோனால். அவரை மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கினால் அடுத்த வாய்ப்பு எனக்கு தான் என்று நினைத்து செந்தில்பாலாஜி தான் என்னை முன் கூட்டியே நீக்கிட்டார். நான் எந்த கட்சியிலும் இணைவில்லை என்றார். கட்சி தலைமை என்னிடம் எந்த விளக்கமும் கேட்வில்லை. நான் எதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.