Skip to main content

''ஷூ போட்டு பாக்கணும்னு ஆசைப்பட்டேன்; அப்படி என்ன வெறி'' - கோகுல்ராஜ் தாயார் கண்ணீர் பேட்டி

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

 "I wanted to put on shoes and look; what a frenzy" - Gokulraj's mother tearfully interviewed

 

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற கல்லூரி இளைஞர் 2015 ஆம் ஆண்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கி இருந்தது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் மீண்டும் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த இளைஞர் கோகுல்ராஜின் தாயார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''ஒன்னும் அறியாத சின்ன பையன். சின்ன வயசிலேயே என்னுடைய கணவர் இறந்துட்டாரு. பசங்க ரெண்டு பேத்தையும் இங்கிலீஷ் மீடியம் படிக்க வைத்தேன். என் வீட்டுக்காரர் பத்தாவது படிச்சிருந்தார். நான் அஞ்சாவது வரைக்கும் தான் படிச்சிருக்கேன். என்னோட பசங்களுக்கு ஷூ போட்டு பாக்கணும்னு ஆசைப்பட்டேன். அந்த மாதிரி பிள்ளையை கூட்டிட்டு போயி கொலை செய்திருக்கிறார்கள். இதற்கு யார் யார் உடன்பட்டாங்களோ அவங்களுக்கு தண்டனை நிச்சயமா கிடைக்கும். அர்த்தநாரீஸ்வரர் கொடுப்பாரு.

 

என் பையனை சித்திரவதைக்கு ஆளாக்கி தலையை துண்டித்திருக்கிறார்கள். அப்படி என்ன என் பையன் தப்பு பண்ணுனான். எவ்வளவு கொடூரமா தப்பு பண்றவங்க எல்லாத்தையும் விட்டுட்டு அறியா குழந்தையை, பச்சமண்ண போய் ஆள் வச்சு கொல்ற அளவுக்கு அப்படி என்ன வெறி. அவன் என்ன தப்பு செஞ்சான். அதனால அந்த தண்டனை நிச்சயமாக கிடைத்ததற்கு நான் நன்றி சொல்றேன். நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், ரமேஷ் ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகையாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கிற்காக போராடிய திருமாவளவன் அண்ணனுக்கு நன்றி. ப.பா.மோகன் சார் எவ்வளவு சூழ்நிலையிலும், அவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத போதும் கூட இந்த கேசை வாதாடி ஜெயிச்சு போராடி வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.