Skip to main content

தொகுதி மக்களுக்கு, பத்து லட்சத்துக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் ஐ.பெரியசாமி...

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் நோய் பரவி வரும் வேளையில், மத்திய மாநில அரசுகள் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அவர்களுக்கு எந்தவித பொருட்களும் முழுமையாக சென்றடையவில்லை. இதை கருத்தில் கொண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கரோனா தடுப்பு நடவடிக்கையில் திமுகவினர் ஈடுபட வேண்டும் என கட்சியினரை  கேட்டுக்கொண்டார்.
 

இந்த நிலையில்தான் திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நிவாரண பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதுபோல் தனது ஆத்தூர் தொகுதியான ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  24 பஞ்சாயத்துகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு முகவசம், கிருமி நாசினி, சோப்பு மற்றும் ஹேண்ட் வாஷ் ஆகிய பொருட்களையும் வழங்கியுள்ளார்.

 

I. Periyasamy


இவ்விழாவிற்கு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியோ பத்து லட்சம் பெருமான சோப்பு, முககவசம் மற்றும் கிருமிநாசினி மருந்துகளை அப்பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட  ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கொடுத்து அந்தந்த பகுதியில் உள்ள மக்களுக்கு கொடுக்கச் சொன்னார்.

 

nakkheeran app


அதுபோல் அனைத்து கிராமங்களிலும் துப்புரவு பணிகளை சிறப்பாக செய்து துப்புரவு பணியாளர்களுக்கும் முககவசம் கிருமிநாசினி மற்றும் ஹேண்ட்வாஸ்களை வழங்கினார். இதில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து இடைவெளி விட்டு நின்று வாங்கிச் சென்றனர்.


இந்தவிழாவில்  திண்டுக்கல் கிழக்கு மாவட்ட  துணை செயலாளர் தண்டபாணி, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜெகன், ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, பண்ணப்பட்டி ஜெகநாதன், ரெட்டியார்சத்திரம் அன்பரசு, பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் சண்முகராஜா, மாவட்ட பிரதிநிதி கன்னிவாடி இளங்கோ, ஊராட்சி மன்றத் தலைவர்கள் புதுப்பட்டி அருணாச்சலம், கொத்தபுள்ளி சுமதி அன்பரசு, நீலமலைக்கோட்டை சின்னுமுருகன், குருநாதனாயகனூர் பழனிச்சாமி, அம்மாபட்டி இராமச்சந்திரன் மற்றும் தாதன்கோட்டை ஆறுமுகம் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.