Skip to main content

“மனைவியை கொன்றது நான்தான், ஆனால் குழந்தைக்காக தற்கொலை செய்துகொள்ளவில்லை” - திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்த கணவன்!! 

Published on 05/06/2021 | Edited on 05/06/2021

 

I misbehaved with my wife, but did not commit suicide for the child" - the husband who confessed to the shocking information

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது ஒலையனூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (22). லாரி டிரைவரான இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நாச்சியார் பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 வயது எழில் செல்வி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. கணவன், மனைவி இருவரும் உளுந்தூர்பேட்டை நகரில் உள்ள கந்தசாமிபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துவந்தார்கள். ஐயப்பனின் மனைவி எழில்செல்வி அடிக்கடி செல்ஃபோனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இதுகுறித்து சந்தேகம் அடைந்த ஐயப்பன், தன் மனைவியிடம் “யாரிடம் அதிக நேரம் செல்போனில் பேசுகிறாய்” என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

இந்த நிலையில், நேற்று (04.06.2021) காலை ஒரு ஆட்டோவில் தனது மனைவி எழில் செல்விக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். மயங்கிய நிலையில் ஒரு ஆட்டோவில் கொண்டு சென்று உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். எழில் செல்வியை மருத்துவமனைக்கு கொண்டுவந்ததும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து பல மணி நேரம் ஆனதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் ரகசியமாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசாருக்கு, எழில்செல்வி மரணம் குறித்து அவரது கணவர் ஐயப்பன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐயப்பனை உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு டிஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் ஐயப்பனிடம் நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறில் தன் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஐயப்பன் ஒப்புக்கொண்டுள்ளார். 

 

இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தைப் போலீசார் பதிவு செய்துள்ளனர். அதில் ஐயப்பன், “கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் எனது மனைவி எழில்செல்வி வேறு யாருடனோ செல்ஃபோனில் நீண்ட நேரம் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். இதுகுறித்து எங்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அடிக்கடி ‘யாரிடம் செல்ஃபோனில் பேசுகிறாய்’ என்று என் மனைவியிடம் கேட்டபோது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான் எழில்செல்வியின் கழுத்தை இறுக்கியபோது அவர் மயங்கி விழுந்தார். பதறிப்போன நான் விடியற்காலை 4:00 மணி அளவில் நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தேன். ஆனால் குழந்தையைக் காப்பாற்றும் எண்ணத்தில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தைக் கைவிட்டேன். அதைத் தொடர்ந்து காலை ஒரு நண்பரின் ஆட்டோவை வரச்சொல்லி எழில்செல்வியை அதில் ஏற்றிக்கொண்டு அவர் சீரியஸான நிலையில் உள்ளதாகக் கூறி உளுந்தூர்பேட்டை அரசு   மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.

 

மனைவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவள் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டதாக கூறினார்கள். இதனால் நம் மீது சந்தேகம் வருமோ என்று நான் குழப்பமான மனநிலையில், இருந்தபோது அங்கு வந்த போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டு சரி செய்தனர். அப்போது நான் உண்மையை ஒப்புக்கொண்டேன்” என்று ஐயப்பன் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து எழில்செல்வியின் உடலை அதே குருந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து எழில்செல்வியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை நெறித்து அவரது கணவரே கொலை செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.