Advertisment

"எனக்கு பொருளாதாரம் தெரியாது... ஆனால் பசி, பட்டினி பற்றி தெரியும்!" - பேரவையில் ஆர்.பி உதயகுமார் பேச்சு!

j

தமிழக பட்ஜெட் கடந்த 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. கூட்டம் துவங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisment

அதன்பிறகு, நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட அதிமுக உறுப்பினர் ஆர்.பி உதயகுமார் பேசியதாவது, "நிதிநிலை அறிக்கை என்பது தாய்ப்பூனை குட்டியைக் கவ்வுவது போல் இருக்க வேண்டும். ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பூனை, எலியைக் கவ்வுவது போல் இருக்கிறது. எனக்கு பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லை என்றாலும், ஏழைகளின் பசி, பட்டினி பற்றி தெரியும். நிதிநிலையைக் காரணம் காட்டி திமுக எந்த ஒரு வாக்குறுதியையும் கைவிட்டு விடக்கூடாது" என்றார். இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், "எங்கள் தேர்தல் வாக்குறுதியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்" என்றார்.

Advertisment

rp udhayakumar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe