''என்னுடைய தமிழுணர்வுக்கு காரணமானவரை இழந்துவிட்டேன்'' - தொ.பரமசிவன் மறைவுக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி!

 '' I have lost the reason for my so much Tamil feeling '' - Seeman tearful tribute tho.paramasivan

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன்(70) உடல்நலக் குறைவால் காலமானார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்அவரதுஉயிர் பிரிந்தது.

தமிழில் இயங்கி வந்த முக்கியமான பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தொ.பரமசிவன்.'அறியப்படாத தமிழகம்', 'பண்பாட்டு அசைவுகள்' போன்ற நூல்கள் அவரின்முக்கியப்படைப்புகளாகத் திகழ்கின்றன.தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தனதுநூல்களின் மூலம் தேடித்தந்தவர். அவரது'அழகர்கோயில்' நூல், கோயில் ஆய்வுகளுக்குமுன்னோடி நூலாகத் தற்போது வரை திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது இரங்கலைத்தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது மறைவு குறித்து, தனியார் தொலைக்காட்சியில் தனது இரங்கலை தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றவர்களுக்கு இது ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படியில்லை. நான்அவரிடம் படித்த மாணவன். இளையான்குடி டாக்டர்.சாகிர் உசேன் கல்லூரியில் அவர் தமிழ்த்துறைதலைவராகஇருந்தார். அந்த நேரத்தில் நான் ரொம்ப சின்ன பையன். இளங்கலை பொருளாதாரமாணவன்தான். எனக்கு இவ்வளவு தமிழுணர்வு இருக்கிறது என்றால் அதற்குஐயாதான் காரணம். என்னை ஊட்டி வளர்த்தார் என்பதில் மாற்று செய்திஇருக்க முடியாது.

அப்பொழுது கல்லூரி ஆண்டு மலருக்குக் கவிதை எழுதிக் கொடுங்கள், கட்டுரை எழுதிக் கொடுங்கள், உங்கள்ஆற்றலை வெளிப்படுத்துங்கள்என்று அவர் அறிவிக்கிறார். அப்பொழுது கவிதைகளை நானும் எழுதிகொடுத்தேன்.எல்லாமே காதல் கவிதையாக இருக்கிறது என அதையெல்லாம் கிழித்து மேலே வீசினார்.அப்பொழுது எனக்குக் கோபம்வந்துஅண்ணன்களைக்கூட்டிக்கொண்டு அய்யா ஏன்இப்படிப் பண்ணுகிறார்எனஅவரிடம்கேட்போம். ''தம்பி நல்லாதானே கவிதை எழுதி இருக்கான் நீங்க ஏன்கிழித்துத் தூர வீசுகிறார்கள்''எனக் கேட்க ''என்னடா உன் தம்பி எழுதிட்டான். காதலைதானே பாடுகிறான் மனிதனைப் பாடுவதற்கு ஒருத்தனும் இல்லையேடா. அவனாவது வரட்டும்டா... மனிதனைப் பாடச்சொல்லுடா''என்றார். அன்னைக்கு தான் எனக்கு மானுடம் குறித்த சிந்தனையே வந்தது. அப்பேர்ப்பட்ட ஒரு பேரறிஞர் அவர்.

 '' I have lost the reason for my so much Tamil feeling '' - Seeman tearful tribute tho.paramasivan

அதன்பின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைக்குப் போய்விட்டார். அங்கிருந்து அவர் பணி செய்துவந்தார். அவருக்கு சர்க்கரை நோய்இருந்தது.அண்மையில்நான் சந்திக்கும்போதுஎனக்கு வயசு ஆயிடுச்சு என்று அவர் கூற, இதெல்லாம் ஒரு வயசா ஏன் இப்படிப் பேசுகிறீர்கள் என்று திட்டி விட்டேன்.தற்பொழுது, ஒரு பெரிய அறிஞரை தமிழ்ப்பேரினத்தின்ஒரு அறிவு பெட்டகத்தைஇழந்துவிட்டோம்.நான் கட்சித்தொடங்கியபோது என்னை ஊக்கப்படுத்தி, அரசியல் வழிப்படுத்திய ஒரு பேராசான்.அப்படிபட்டஒரு தமிழறிஞரைதமிழ்ச் சமூகம் இழந்துவிட்டது. 'அறியப்படாத தமிழகம்' என்பன உள்ளிட்டஎத்தனையோ புத்தகங்களை எழுதியஅப்படிப்பட்டஅறிஞருடைய மாணவன்,அவரிடம்தமிழ்ப் படித்தமாணவன் என்ற திமிர் எனக்குஉண்டு.அப்படிப்பட்டஒரு பேரறிஞரைநான் இழந்துவிட்டேன் என்பதால்,ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு எனக் கண்ணீர் மல்க தனது இரங்கலைத் தெரிவித்தார்.

nam tamilar seeman writer
இதையும் படியுங்கள்
Subscribe