'அயோத்தி ராமர் கோயில் என்பது பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் திட்டம்' என குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பை நிராகரித்துள்ளனர்.
நல்ல கூட்டணி அமையும். கூட்டணி அமைந்த பிறகு யார் யாருக்கு எவ்வளவு சீட்டுகள் என்பதெல்லாம் உங்களுக்கு தெளிவுபடுத்துவேன். போக்குவரத்து தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பலமுறை இந்த அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தாலும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தொழிலாளர்களின் குறைந்தபட்ச கோரிக்கையாவது நிறைவேற்றித் தாருங்கள் என்று வேண்டுகோள் வைத்தார்கள். அதையும் இந்த அரசு நிராகரித்துவிட்டது. அதனால் அவர்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டார்கள். உயர்நீதிமன்றம் தீர்ப்பின்படி தொழிற்சங்கங்கள் எல்லாம் பணிக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியதன் காரணமாக வேலைக்கு திரும்பி இருக்கிறார்கள். திமுக, தொழிலாளர் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என்றார்.