Skip to main content

''நான் செய்த எல்லா பணிகளுக்கும் ஆவணங்கள் வைத்திருக்கிறேன்'' - நத்தர்ஷா பள்ளிவாசல் அறங்காவலர் அல்லாபக்‌ஷ்

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

 "I have documents for all the work I have done" - Natarsha Masjid Trustee Allah Baksh

 

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் தலைமை அறங்காவலர் அல்லாபக்‌ஷ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சுழற்சி முறையில் மற்றொருவரை பொது அறங்காவலராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

கடந்த 6 ஆம் தேதி அன்று வக்பு வாரியத்தின் திருச்சி மண்டலத்திலிருந்து ஒரு கடிதம் பள்ளிவாசலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய நிர்வாக அறங்காவலர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், வக்பு வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் வெளியிட்ட குறிப்பாணை அடிப்படையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பாளர் கடிதம் அனுப்பி இருந்தார்.

 

வக்பு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக ரபியுல்லா கடந்த 30 ஆம் தேதியோடு பதவியில் இருந்து விலகிவிட்டார். புதிய தலைமை செயல் அதிகாரியாக அரசு கேபிள் நிறுவனத்தில் பணியாற்றிய ஜெய்னுலாப்தீன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு கடந்த மார்ச் 30 ஆம் தேதி இந்த ஆணையை வழங்கினாலும் கூட கடந்த 10 ஆம் தேதி தான் ஜெய்னுலாப்தீன் பதவியில் வந்து சேர்ந்துள்ளார். கடந்த 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை வக்பு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி பதவி காலியாக இருந்தது. பொறுப்பு அதிகாரியாக யாரும் நியமிக்கப்படாத நிலையில் இந்த கடிதத்தை யார் அனுப்பியது? யார் சொல்லி அனுப்பியது? எனக் கேள்வி எழுந்தது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விவகாரம் குறித்து நத்தர்ஷா பள்ளிவாசல் அல்லாபக்‌ஷிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, ''நான் கடந்த 6 ஆம் தேதி அறங்காவலர்கள் கூட்டம் நடத்த உள்ளதாக அறங்காவலர்களுக்கும், வக்பு வாரியத்துக்கும் கடிதம் அனுப்பி வைத்தேன். அங்கிருந்து மீண்டும் பதில் கடிதம் மூலம் தொடர்ந்து தலைமை அறங்காவலராக இருப்பதற்கு வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. பொதுவாக பொது அறங்காவலர்கள் 3 பேர், கௌரவ பதவியான பங்காளி, பரம்பரை அறங்காவலர்கள் தலா ஒருவர் வீதம் என மொத்தம் 2 பேர் இருப்பார்கள். இந்த 5 பேரில் பொது அறங்காவலர்கள் 3 பேரில் ஒருவர் தலைமை அறங்காவலராக நியமிக்கப்படுவார்கள்.

 

தற்போது பங்காளி, பரம்பரை அறங்காவலர்கள் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இந்த இருவரையும் நியமிக்க வேண்டியது வக்பு வாரியம் தான். எனவே அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு தலைமை அறங்காவலராக தொடருவதற்கான கூட்டத்தை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதுதான் நீதிமன்ற உத்தரவும் கூட. இந்த 5 பேரில் யாரும் பதவியில் இல்லாமல் புதிய நிர்வாகி அந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் வரை தலைமை அறங்காவலர் பதவியில் நீடிப்பார். அவரும் 3 வருடங்கள் மட்டுமே நீடிக்க முடியும். அதேபோல் வங்கிக் கணக்கில் 63 லட்சம் இருந்ததாக கூறுகிறார்கள். நான் செய்த எல்லா பணிகளுக்கும் உரிய ஆவணங்கள், ஆடிட்டிங் என அனைத்தும் சரியாக வைத்து வக்பு வாரியத்துக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

 

அதேபோல் வக்பு வாரியத்தில் இருந்து கடிதம் சிஇஓ இல்லாமல் எப்படி வந்தது என்று கேட்டுள்ளனர். அவர்களுக்கு அதற்கான வரைமுறை தெரியவில்லை. ஒருவர் இல்லாத பட்சத்தில் அவருக்கு கீழ் உள்ள பொறுப்பு அதிகாரி நான் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார். எனவே, அவர்கள் சொல்லும் எந்த குற்றச்சாட்டுக்கும் அவர்களிடம் உரிய ஆதாரம் இல்லை. எனவே, ஆதாரம் இல்லாமல் பேசும் அவர்களுடைய வார்த்தைகளை நான் கேட்பதாகவும் இல்லை. நான் இந்த பள்ளிவாசலுக்கு வந்த பிறகு பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் இந்த பள்ளிவாசலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவேன்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

“20 கோடி மக்கள் முக்கியமில்லையா?” - பிரதமர் பேச்சுக்கு கபில் சிபல் காட்டம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Kapil Sibal condemn for Prime Minister's speech on about muslims

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, கங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து பிரதமர் மோடியின் இந்த பேச்சு ‘மத வெறுப்பு பேச்சு’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Kapil Sibal condemn for Prime Minister's speech on about muslims

அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி கபில் சிபல், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பெண்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் காங்கிரஸ் கொடுப்பதாக பிரதமர் மோடி பேசுகிறார். இந்த நாட்டின் 20 கோடி மக்கள் முக்கியமில்லையா? அவர்களுக்கு ஆசைகள் இல்லையா?

அரசியல் இவ்வளவு நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. வரலாற்றில் இது நடந்ததில்லை. அப்படி நடக்க நான் விரும்பவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் அதைக் கண்டிக்க வேண்டும் மற்றும் பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.