Skip to main content

“நான் குடிக்கல... உங்க மிஷின் தப்பா காட்டுது...” - வைரலான போலீஸ் - இளைஞர் வாக்குவாதம்!

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

 "I don't drink.. Your machine is showing fault..." -Viral Police - Youth Argument!

 

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்ய, “எனக்கு குடிப்பழக்கமே இல்லையே… போங்க சார்.. உங்க மிஷின் தப்பு சார்… நீங்க என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்  ப்ளட் டெஸ்ட் எடுங்க..” என போலீஸ்காரரிடம் இளைஞர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

அந்த வீடியோவானது சென்னை தேனாம்பேட்டையில் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் இரவு ரோந்துப் பணியில் இருந்த சட்டம்-ஒழுங்கு எஸ்.ஐ. இளங்கோவன், ஒரு காரை தணிக்கை செய்யும்போது அதனை ஓட்டி வந்த தீபக்கை, பிரீத் அனலைசர் கருவியை வைத்து ஊதச் செய்திருக்கிறார். அப்போது 45 சதவீதம் ஆல்கஹால் இருப்பதாகக்  காட்டியது. தீபக்கோ, மதுப்பழக்கமே எனக்கு கிடையாது என வாக்குவாதம் செய்தார்.  வேண்டுமானால் என்னை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பரிசோதனை செய்யுங்கள். அப்போது, எனது ரத்தத்தில் ஆல்கஹால் இருப்பதாகக் காட்டினால் நான் சம்மதிக்கிறேன் என்கிறார்.

 

எஸ்.ஐ. இளங்கோவனோ, வழக்கு போடுவது மட்டுமே எங்கள்  வேலை, நான் தவறு செய்யவில்லை என்பதை நீங்களே நிரூபியுங்கள் என எதிர்வாதம் செய்கிறார்.  இதையடுத்து, வேறு ஒரு பிரீத் அனலைசர் கருவி மூலம் 2 முறை சோதனை செய்யப்பட்டது. இருமுறையும் ஜீரோ பெர்சன்டேஜ் காட்டியது. இதனால், வழக்கு பதிவு செய்யாமல் அவரை அனுப்பி வைத்துவிட்டனர் போலீசார்.    இதனிடையே, தீபக்குடன் வந்த நண்பர் இந்த வாக்குவாதத்தை செல்போனில் பதிவு செய்து ஊடகங்களுக்கு கொடுத்ததால் பழுதான கருவியை வைத்து போலீசார் வழக்குப் பதிவு செய்வதாக செய்திகள் வெளியாகின.

 

இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் காவல் ஆணையர் கபில் குமார் சரத்கர் செய்தியாளர்களிடம்  பேசியபோது,  “போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறை உதவியுடன் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்து வருகிறோம். ஆனால் இதுவரை யாரும் எங்களுக்கு இப்படி ஒரு புகார் அளித்ததில்லை. நாங்கள் சோதனை செய்யும் கருவிகள் அனைத்தும் நல்ல பராமரிப்பில் இருக்கிறது. இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் அதிகாரிகள் முன்கூட்டியே அவைகளைச் சரிபார்த்த பின்பே உபயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். 383 கருவிகள் எங்களிடம் உள்ளது. இவையனைத்தும் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டது.  ஒரு கருவியின் விலை 40 ஆயிரம் ரூபாய் ஆகும்.  பொது மக்களுக்கு சிறிது நேரம் சிரமம் இருந்தாலும், விபத்துகள் ஏற்படாமல் இருக்க இதுபோன்ற சோதனைகளில் ஈடுபடுவது முக்கியம்” எனக் குறிப்பிட்டார்.

 

சம்பந்தப்பட்ட போலீஸ்காரரைத் தொடர்பு கொண்டோம்.

“நாங்கள் சோதனையில் ஈடுபடும்போது, எல்லோருக்கும் பிரீத் அனலைசர் கருவியைப் பயன்படுத்தமாட்டோம். குடித்துவிட்டு வருபவர்கள், நம்மைக் கண்டாலே தப்பிச் செல்வதற்குத்தான் பார்ப்பார்கள். ஒரு சிலர் வாயை ஊதமாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள். நாங்கள் அருகே சென்று பேச்சுக் கொடுப்போம். அப்போது, மது வாடை அடித்துவிடும். அப்படியான நபர்களுக்குத்தான் ப்ரீத் அனலைசர் கொண்டு சோதனை நடத்துவோம்.

 

அன்றைய தினம் சம்பந்தப்பட்ட காரை நிறுத்தினோம். கார் டோரை திறந்ததுமே மது வாடை அடித்தது. அந்தக் காரில் மேலும் 2 பேர் இருந்தனர். ஒருவேளை அவர்கள் குடித்திருந்திருக்கலாம். ஏசி கார் என்பதால், அந்த ஸ்மெல் வெளியே வந்திருக்கலாம். அதனால், 45 பர்சன்ட் கருவியில் காட்டி இருக்கலாம். அவங்க கூட இருந்தவர்  நான் ஆர்கியூ பண்றதை வீடியோ பதிவு செய்தார். நாங்களும் எங்க தரப்புக்காக வீடியோ பதிவு செய்து வைத்திருக்கிறோம். இதில் எங்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை” எனத் தெரிவித்தார்.

 

 "I don't drink.. Your machine is showing fault..." -Viral Police - Youth Argument!

 

‘பக்கத்தில் இருந்தவர் குடித்திருந்தாலும், ப்ரீத் அனலைசர் கருவி இப்படி காட்டுமா?’ என நமக்குத் தெரிந்த போக்குவரத்து காவலர் ஒருவரிடம் கேட்டோம். “அப்படி எல்லாம் நடக்காது சார்… நல்லா வாயை வச்சு 2 அல்லது 3 முறை ஊதினால்தான் எவ்வளவு ஆல்கஹால் கன்டென்ட் இருக்கு என்பதைக் காட்டும். 10 நிமிடத்திற்கு முன்னாடி குடித்திருந்தார் என்றால் 100 அல்லது 150 பெர்சன்டேஜ் காட்டும். 3 மணி நேரத்திற்கு முன்னாடி குடித்திருந்தால், அளவு குறைவாகக் காட்டும்.  அதாவது 50 அல்லது 60 பெர்சன்டேஜ் காட்டும். 40 பெர்சன்டேஜுக்கு மேல வந்தால் கேஸ் போடுவோம். 10 மணிநேரத்திற்கு முன்னாடி குடித்திருந்தால் 5 அல்லது 10 பெர்சன்ட் காட்டும்.  அவர்களும் சார். நான் நேற்று குடித்தேன் என்று உண்மையை ஒத்துக் கொள்வார்கள். நீங்கள் சொன்னது மாதிரி பக்கத்தில் இருந்தவன் குடித்திருந்தால் கருவியில் பதிவாகாது.” என்றார்.

 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டிஜிபி சைலேந்திரபாபு, “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை அதி நவீன கருவி மூலம் கண்காணிக்கிறோம். 6 மணி நேரத்திற்கு முன்பு அல்லது நேற்றைய தினம் மது அருந்தி இருந்தால் கூட இயந்திரம் மூலம் கண்டுபிடித்து விடலாம். மூன்று மாதங்களுக்கு முன் வாங்கிய இயந்திரத்தைத்தான் காவல்துறையினர் பயன்படுத்தி வருகிறார்கள். புகார் மீது விசாரணை நடத்தப்படும். இயந்திரத்தில் தவறு இருந்தால் நிச்சயம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

 

காவல்துறை நல்லபடியாக விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் தினமும் இதுபோன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.