அழுது தவிக்கிறேன்...! - பொள்ளாச்சிக் கொடுமை குறித்து நடிகர் ராஜ்கிரண்

actor Rajkiran

ஒரு தகப்பனாய்,

ஒரு தாத்தனாய்,

பல நூற்றுக்கணக்கான

என் பெண் குழந்தைகளுக்கு

இழைக்கப்பட்டிருக்கும்

அநீதியை நினைத்து,

அவர்களின் வாழ்க்கை

சூறையாடப்பட்டிருப்பதை அறிந்து,

அழுது தவிக்கிறேன்...

.

தனிமனிதனான என்னால்,

எதுவுமே செய்ய முடியாமலிருக்கும்,

எனது

இயலாமையை நினைத்துக்

குமுறுகிறேன்...

.

அரசுக்கும்,

அதிகார வர்க்கத்திற்கும்,

காவல் துறைக்கும்,

புலனாய்வுத் துறைக்கும்

தெரியாமல்,

ஏழு வருடங்களாக,

இப்படி பல

படுபாதகச்செயல்கள் நடந்து,

ஆயிரக்கணக்கான காணொளிகள்

எடுக்கப்பட்டிருப்பதற்கு

வாய்ப்பே இல்லை...

.

ஆதலால்,

தமிழ் நாட்டின்

மாணவச்செல்வங்கள்,

தன்னார்வலர்கள்,

இளைஞர்கள்,

மனித நேயர்கள்

அனைவரையும்

உதவி கேட்டு

நான் கெஞ்சுகிறேன்...

.

இந்த வழக்கைப்

பொறுப்பில் இருக்கும்

காவல் துறையினரிடமிருந்து

தவிர்த்து,

.

சிறப்பு நீதி மன்றத்தின் மூலம்,

நீதி மன்றத்தின்

மேற்பார்வையிலேயே,

தன்மானமும், கடமை உணர்வும்,

அரசியல், அதிகார வர்க்கத்திற்கு

அடிபணியாத

நேர்மையும்,

நெஞ்சுரமும் கொண்ட

காவல் துறை அதிகாரிகளை

தேர்ந்தெடுத்து,

அவர்கள் மூலம் வழக்கை நடத்தி,

.

குற்றம் சாட்டப்பட்டவர்கள்,

மற்றும்

அவர்களுக்குத் துணை போன,

அவர்களுக்காக மூடி மறைத்த,

அவர்களால் பயனடைந்த

அத்தனை

முக்கிய பிரமுகர்களையும்

கூண்டிலேற்றி,

நீதியை நிலை நாட்டவும்

தர்மம் காக்கப்படவும்,

உங்கள் அனைவரையும்

கெஞ்சுகிறேன்

*

actor Rajkiran issue pollachi
இதையும் படியுங்கள்
Subscribe