Skip to main content

‘’இருகரம் கூப்பி மன்றாடிக்கேட்டுக்கொள்கிறேன்!’’ - வைகோ உருக்கம்

Published on 08/05/2018 | Edited on 08/05/2018
vaiko ali

 

நீட் தேர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மதிமுக தொண்டர் ஜகுபர் அலி தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.  தற்கொலைக்கு முயன்ற ஜகுபர் அலி,  கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்த செய்தி அறிந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  ‘’உயிரைப் போக்கிக்கொள்ள முயலாதீர்கள்.  குடும்பத்தினரை துயரப்படுகுழியில் தள்ளாதீர்கள்.   உடைந்துபோன உள்ளத்தோடு இருகரம் கூப்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்’’என்று உருக்கத்துடன் கூறினார்.  

சார்ந்த செய்திகள்