Skip to main content

நான் கரோனாவைவிட பயங்கரமானவன் - 144 உத்தரவை கடைபிடிக்காத இந்து மக்கள் கட்சி மா.செ கைது

Published on 03/04/2020 | Edited on 03/04/2020

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை  தெற்குதெரு பகுதியைச் சேர்ந்தவர் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சதீஷ். 35 வயதான இவர், மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அதனை கொஞ்சமும் மதிக்காமல், தனது இருசக்கர வாகனத்தில் வாலாஜா நகரை சுற்றி சுற்றி வந்துள்ளார்.

 

 I am worse than Corona - 144 Hindu People's Party person arrested for not following orders


வாலாஜா, இராணிப்பேட்டை என வலம் வந்த அவரை மடக்கி  வீட்டுக்கு செல்லுமாறு கண்காணிப்பு போலீஸார் பல முறை அறிவுறுத்தியுள்ளனர். அதனை மதிக்காமல், நீ யார் என்னை கேள்வி கேட்க, நான் மா.செ, சட்டம்மெல்லாம் என்னை ஒன்னும் செய்ய முடியாது என காவலர்களிடம் எகிறியுள்ளார் சதிஷ்.

அதோடு, நான் கரோனாவை விட பயங்கரமானவன், நீங்கள் யார் எனக்கு உத்தரவு போடுவது என்று போலீசாரிடம் காட்டமாக பேசியுள்ளார். இந்த தகவலை ராணிப்பேட்டை எஸ்.பி மயில்வாகனத்திடம் தெரிவித்துள்ளனர், வாலாஜா காவல்துறை அதிகாரிகள். இதனையடுத்து 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றியது, கேள்வி எழுப்பிய போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த வாலாஜாபேட்டை நகர போலீசார் அவரை  கைது செய்தனர்.

பின்னர் அவருக்கு சொந்த ஜாமினில் வெளியே அனுப்பினர். இது வாலாஜாவில் எந்த வேலையும் இல்லாமல் பைக் எடுத்துக்கொண்டு சுற்றுபவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்களுடைய கனவு பலிக்காது; உருட்டல் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம்' - இபிஎஸ் பேச்சு!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
'Your dream will not come true; We will not be afraid of rolling intimidation'-EPS speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'முன்பு கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அதற்கு பிறகு அவருடைய மகன் ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு இன்றைக்கு  அவருக்கு ஒரு அமைச்சர் பதவியை கொடுத்து தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய அனுப்பி இருக்கிறார்கள். இது என்ன உங்கள் அப்பா வீட்டு சொத்தா? தமிழ்நாடு.

ஏன் இங்கு இருப்பவர்களில் யாரும் வரக்கூடாதா? மேடையில் இருப்பவர்கள் வரக்கூடாதா? இது ஜனநாயக நாடு மு.க.ஸ்டாலின் அவர்களே. உங்களுடைய கனவு பலிக்காது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். வாரிசு அரசியல் இங்கு கிடையாது. இந்த தேர்தலோடு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் மக்கள். போகும் பக்கம் எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை சாடி பேசுகிறார். என்னைப் பற்றி தரக்குறைவாக பேசுகிறார். அரசியலுக்கு வந்து விட்டால் எல்லா விமர்சனங்களும் தாங்கக்கூடிய சக்தி எங்களுடைய தலைவர்கள் எங்களுக்கு வழங்கிய விட்டு சென்றுள்ளார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். எங்கள் தொண்டன் கூட பயப்பட மாட்டான். உங்களுடைய உருட்டல், மிரட்டல், அவதூறு பேச்சுக்கெல்லாம் அடிபணியும் கட்சி அதிமுக அல்ல''என்றார்.

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.