Skip to main content

“அமைச்சர் மனோ தங்கராஜ் நடவடிக்கை எடுக்காதது கவலை..”  - சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் பொன்மனை வல்சகுமார்

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

"I am worried that Minister Mano Thankaraj will not take any action." General Secretary Ponmanai Valsakumar

 

தமிழ்நாட்டில் ரப்பர் தோட்டங்கள் உள்ள ஒரே மாவட்டம் கன்னியாகுமரி. இங்கு உற்பத்தி செய்கிற ரப்பர் பால்தான் ஆசியாவிலேயே தரமானது என்ற பெருமையும் இன்றுவரை நிலைத்து நிற்கிறது. 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அரசு ரப்பர் தோட்டத்தில், சுமார் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவருகிறார்கள். ஒருதுளி மழை பெய்தால் கூட ரப்பர் மரங்களிலிருந்து ஒரு சொட்டு பால் கூட வடித்து எடுக்க முடியாது. இதுதான் ரப்பர் தோட்டம் மற்றும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நிலைமை.

 

இந்த மாதிரி நிலையில்தான் கடந்த 3 மாதங்களாக குமரியில் கொட்டித் தீர்க்கும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கிறார்கள். ரப்பர் மரங்கள் அடர்த்தியாகவும் அதிகமாகவும் உள்ள கீரிப்பாறை, பெருஞ்சாணி, பேச்சிப்பாறை, மணலோடை, சிற்றார், பரளியாறு, காளிகேசம், குற்றியார், கோதையார், மயிலார், மருதம்பாறை போன்ற பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் சாலைகளிலும் வெள்ளம் நிரம்பி பெருக்கெடுத்து ஓடுகிறது.

 

"I am worried that Minister Mano Thankaraj will not take any action." General Secretary Ponmanai Valsakumar

 

இதனால் ரப்பர் பால் வடியும் சிரட்டைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் நம்மிடம் பேசிய தொழிலாளி ஸ்டீபன், “பருவமழை காரணமாக கடந்த 3 மாதங்களில் 12 நாட்கள்தான் வேலை செய்ய முடிந்தது. மற்ற நாட்களில் தொடர்ந்து பெய்யும் மழையால் தோட்டத்துக்குப் போக முடியாமல் வீட்டுக்குள்ளேயே கிடக்கிறோம். மாதம் முழுவதும் வேலை செய்தால்தான் எங்களுக்கு சம்பளம் கிடைக்கும். ஆனால், மழையின் காரணமாக வருமானமின்றி செலவுக்குப் பணம் இல்லாமல் கஷ்டப்படுறோம். அரசு எங்க நிலைமையைப் பற்றி கொஞ்சமும் புரிந்துகொள்ளவில்லை. அரசு தோட்டத்தில் வேலை செய்தாலும் தினக்கூலியாகவேதான் எங்க பொழப்பு இருக்கிறது.” என்றார்.

 

"I am worried that Minister Mano Thankaraj will not take any action." General Secretary Ponmanai Valsakumar

 

குமரி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் சங்க சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் பொன்மனை வல்சகுமார், “எவ்வளவு வலியுறுத்தியும் மழைக்காலங்களில் இந்தத் தொழிலாளர்களின் நிலையை அரசு கவனிக்கவில்லை என்ற குறை உள்ளது. கடலில் மீன் பிடிக்கும் தொழிலாளர்களுக்குக் கூட தடைக்கால நிவாரண உதவி வழங்கப்படுகிறது. மழை என்பது யதார்த்தமான நிலை. அந்த நேரத்தில் இங்கிருக்கிற அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. மலையோரப் பகுதிகளில் இருக்கிறவங்கதானே நமக்கென்ன கவலையின்னு அதிகாரிகள் இருக்கிறாங்க. இந்த தொழிலாளர்களுக்குப் பஞ்சகால நிவாரண உதவி என்கிற முறையில் அரசு உதவி செய்தால்தான் அது பெரிய உதவியாக இருக்கும். மேலும், ரப்பர் தோட்டம் உள்ள தொகுதியின் எம்.எல்.ஏ. ஆகவும் மந்திரியாகவும் இருக்கும் மனோ தங்கராஜ் அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காததுதான் கவலையாக உள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.