Skip to main content

இந்த கூட்டம் எனக்கு திருப்தியில்லை... அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த எம்.பிக்கள்!

Published on 24/11/2019 | Edited on 24/11/2019

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று 23.11.2019 மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக் கூட்டம் தலைவர் மற்றும் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் திரு. சி. என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில், உறுப்பினர் செயலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குழுவின் இணைத் தலைவர் மற்றும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர். எம். கே. விஷ்ணுபிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்), மு.பெ. கிரி (செங்கம்), கே. வி. சேகரன் (போளுர்) ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 

I am not satisfied with this meeting ... MPs who pierced the officials with questions!

 

திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக் கூட்டம் மத்திய அரசின் நெறிமுறைகளுக்கு ஏற்றபடி, திட்ட செயல்பாடுகள் குறித்தும் உரிய செலவினங்கள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று 23.11.2019 மத்திய, மாநில அரசின் திட்டங்களின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், மத்தியரசின் வேலை உறுதியளிப்பு திட்டம், பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டம், கழிவறை திட்டம், குடிநீர் திட்டம், முதியோர் உதவித்தொகை போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கேள்விகளாக எழுப்பினர். இதற்கு சரியான பதில்களை சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள்.

வேளாண்மையை மட்டும்மே நம்பியுள்ள இந்த மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் செய்யப்படும் திட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு சரியான முறையில் சொல்வதில்லை என்பதையும் எடுத்துச்சொன்னார்கள்.

 

I am not satisfied with this meeting ... MPs who pierced the officials with questions!

 

அதேபோல் நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த 8 ஆண்டுகளாக திருவண்ணாமலைக்கு பைபாஸ் சாலை அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. ஊரக சாலைகள் சரியாக அமைக்காதது போன்றவற்றையும் சுட்டிக்காட்டினர் மக்கள் பிரதிநிதிகள்.

அதோடு, திட்டங்கள் செய்துள்ளோம் என புள்ளிவிபரங்களை தந்துள்ளீர்கள், அது எங்கங்கு செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பி அதுப்பற்றிய தகவல் எங்கே என கேட்டபோது, துறை அதிகாரிகள் தருகிறோம் எனச்சொன்னார்களே தவிர அதுப்பற்றி விளக்கமாக எதையும் சொல்லவில்லை. நீங்கள் எங்கங்கு என்னன்ன பணிகள் செய்துள்ளீர்கள் எனச்சொன்னால் தானே, நாங்கள் செய்துள்ளார்களா என ஆய்வு செய்ய முடியும் என்றார்கள்.

கூட்டம் பற்றி இறுதியாக பேசிய குழு தலைவர் எம்.பி அண்ணாதுரை, இந்த கூட்டம் எனக்கு முழு திருப்தியை தரவில்லை. 3 மாதத்துக்கு ஒருமுறை இந்த கூட்டம் நடைபெறும். அடுத்த கூட்டம் நடைபெறும்போது துறைவாரியாக செய்துள்ள பணிகள் முழு விபரம் தேவை என்றார்.

இந்த கூட்டத்தில் மாநிலத்தை ஆளும் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்யார் எம்.எல்.ஏ தூசி.மோகன், கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.