Skip to main content

'ஏழு சட்டமன்றத் தொகுதிக்கும் நான்தான் எம்.எல்.ஏ...''- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

Published on 13/10/2022 | Edited on 13/10/2022

 

"I am the MLA for all seven assembly constituencies..." - Minister I Periyasamy's speech

 

திண்டுக்கல்லில் திமுக கிழக்கு மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு  கழக துணைப் பொதுச் செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் மேற்கு மாவட்டச் செயலாளரும், உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி மற்றும் கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் உள்பட மாவட்டம், நகரம், ஒன்றியம்,பேரூர் கழகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது,'' தமிழகத்தை பாதுகாக்கும் தலைவராகவும், இயக்கத் தலைவராகவும் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள தலைவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிதான் வெற்றி பெற்றோம். ஆனால் இரண்டு அமைச்சர்களை ஸ்டாலின் கொடுத்து இருக்கிறார். அதற்கு காரணம் கலைஞர் காலத்திலும் சரி மு.க.ஸ்டாலின் காலத்திலும் சரி திண்டுக்கல் என்றாலே ஆழமான பாசம் உள்ளது.

 

"I am the MLA for all seven assembly constituencies..." - Minister I Periyasamy's speech

 

நமது மாவட்டம் சிறிய மாவட்டம் தான் இருந்தாலும் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுத்தார். அந்த மாநாட்டுக்கு ஒட்டன்சத்திரம் தொகுதியின் பங்கு அதிகமாகவே இருந்தது. நாம் வெற்றிபெற்ற பின் கரோனா, வெள்ளம், உள்ளாட்சித் தேர்தல் என தொடர்ந்து ஒன்றரை வருடம் ஓடிவிட்டது. அதனால ஒன்னும் செய்ய முடியவில்லை இனி வரும் காலங்களில் லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர முதல்வர் உறுதியாக இருக்கிறார். தற்பொழுது கூட்டுறவுத்துறை மூலம் 6500 பணியிடங்கள் நிரப்ப இருக்கிறோம். இதில் 300 பேருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இருக்கு. அதுபோல் சத்துணவுத் துறையிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2000 இடம் காலியாக உள்ளது. அதையும் நிரப்ப இருக்கிறோம். அதுபோல் நெடுஞ்சாலைத் துறை உட்பட  அனைத்து துறைகளிலும் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசியல் கிடையாது. இயக்கத்தில் யாருக்கு வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்று நினைக்க வேண்டாம் நிச்சயம் மாற்றம் வரும். நம் மீது அவதூறு பரப்பி வரும் வருபவர்களுக்கு இளைஞர் அணிதான் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.

 

மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் நான் தான் எம்.எல்.ஏ. எல்லா தொகுதிகளுக்கும் வந்து இளைஞர்களை சந்திப்பேன் கழகத்தின் ஒவ்வொரு வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம். நாங்கள் இல்லை. தங்களின் உழைப்பு மூலம்தான் எனக்கு தலைவர் துணைப் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்திருக்கிறார். அதேபோல் மாவட்டத்தில் உழைத்தவர்களுக்கு பதவிகளை தேடிக் கொடுக்கிறோம். இங்குள்ள மேயர் பதவி வேண்டும் என்று என்னிடம் வந்து கேட்கவில்லை ஆனால் உழைத்தவர்களுக்கு நாங்களே பதவிகளை தேடி கொடுத்திருக்கிறோம். இப்படிதான் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் மூலம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவிகளை தேடி கொடுத்திருக்கிறோம். தனக்கு பதவி கிடைக்கவில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். கிராமங்களில் கட்சியை பலப்படுத்த அனைவரும் அங்கங்கே இருக்கக்கூடிய பிரச்சனைகளை எடுத்து மக்களுக்கு சேவை செய்து கட்சியை வளர்க்க வேண்டும். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.