Skip to main content

“என் கம்பெனில நான் வேலை கொடுக்கிறேன்...”-எச்.ராஜாவை டிவி வேலைக்கு அழைத்த ஊடகவியலாளர்!

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

nn

 

பா.ஜ.க. முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் டென்ஷனாகி வரம்பு மீறிப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.  

 

அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் வீட்டுப் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த எச்.ராஜாவை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

 

அப்போது,  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை தொடர்புப்படுத்தும் விதத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக லீக்கான ஆடியோ குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு எச்.ராஜா “இந்தக் கேள்வியே தப்பு. நேற்று எங்கள் மதுரை மாவட்டத் தலைவர் இது ஃபேக் ஆடியோ என்று சொன்னது எல்லா சோஷியல் மீடியாவுலயும் வந்திருக்கு. அவர் சரவணன் மிமிக்ரி பண்ணி வெளியிட்டிருக்காருன்னு  கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காரு அப்புறம் என்கிட்ட என்ன?” என்று கோபமாக, நிருபர் ஒருவர்  “நாங்க கேள்வி கேட்கிறோம். அதற்கு பதில் இல்லையென்றால் முடிஞ்சு போச்சு..” என்று கூற, எச்.ராஜாவோ “நீங்க ஒவ்வொண்ணும் கேட்பீங்க.. அப்புறம் நான் கேட்டா தப்பா போயிரும்.  உங்க வீட்ல யாரையாவது பத்தி நான் சும்மா கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங்கன்னு..” என்று பேச்சை உஷ்ணமாக்க.. அந்த நிருபரும் விடாமல் “நான் உங்க வீட்ல உள்ள ஆள கேள்வி கேட்டா தப்பாயிரும்ல. அதேதான்..” என்று மடக்க, ஆத்திரமான எச்.ராஜா “என் கட்சி  என் வீடு. நீங்க பேசக்கூடாது. இந்த கேள்வியை அங்கே கேட்பீங்களா? முதுகெலும்பு இருக்கா? தைரியம் இருக்கா? ராஜாகிட்ட வந்து என்னமோ தைரியமா கேள்வி கேட்டுட்டோம்னு நினைச்சிக்கிறதா? இனிமே பொய்யா யாருகிட்டயும் கேட்காதீங்க. வேலையே இல்லைன்னா பரவாயில்ல. வாங்க என் வீட்ல நான்  வேலை தர்றேன்.” என்று தெனாவெட்டாகப் பேச, அந்த நிருபர் “நீங்க வாங்க சார்.. என் கம்பெனில நான் வேலை கொடுக்கிறேன்.”என்று பதிலடி கொடுக்க, எச்.ராஜா விருட்டென்று கிளம்பினார். அவருடன் வந்த பா.ஜ.க.வினர் அந்த நிருபரைத் திட்டியபடியே சென்றனர்.

 

எச்.ராஜா போன்ற பா.ஜ.க. தலைவர்கள்,  செய்தியாளர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல், அனைத்துச் செய்தியாளர்களையும் அவ்வப்போது விமர்சித்து வருகின்றனர்.  ‘நீங்க எந்த டிவி? நீங்க எந்தப் பத்திரிகை?’ என்றும் கேட்கின்றனர்.  ஒருபடி மேலே போய், செய்தியாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களையும், அதனை நிர்வகிப்பவர்களையும் திட்டுகின்றனர்.

 

பா.ஜ.க. தலைவர்களின் கோபத்துக்கான  காரணத்தைச் சொன்னார் ஒரு மூத்த செய்தியாளர். “பா.ஜ.க.வினருக்கு தெரிந்ததெல்லாம் மத அரசியல்.. சாதி அரசியல்தான். தமிழ்நாட்டில் சாதி, மதம் பார்க்காமல் செயல்படுவது ஊடகங்கள் மட்டும்தான். அதனாலேயே, சமூக நீதி பக்கம் ஊடகங்கள் நிற்கின்றன. சனாதனத்தை தூக்கிப்பிடிக்கும் பா.ஜ.க. தலைவர்களுக்கு சமூக நீதி என்றால் வேப்பங்காயாகக் கசக்கும்.  அந்த வெறுப்பை ஊடக நிறுவனங்கள் மீதும், செய்தியாளர்கள் மீதும் காட்டுகின்றனர். இதிலேயே, அவர்களது போலி சனாதனதர்மம் வெளிப்பட்டுவிடுகிறது.” என்றார்.

 

செய்தியாளருக்கு வீட்டு வேலை தருவதாக எச்.ராஜா சொன்னது எத்தனை ஆணவமான பேச்சு! 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.