Skip to main content

"உலகத் தரத்திலான உயர்கல்வி பெறவே நான் முதல்வன் திட்டம்” - அமைச்சர் சி.வெ.கணேசன் 

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

"I am the first project to get world class higher education" - Minister C.V.Ganesan

 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 'கல்லூரி கனவு' எனும் பிளஸ் டூ மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கடலூர் கம்மியம்பேட்டை புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

 

இதில் அமைச்சர் கணேசன் பேசுகையில், "மாணவர்களின் வாழ்வில் பன்னிரண்டாம் வகுப்புக்குப் பின் அவர்கள் படிக்கும் உயர்கல்வி அவர்களது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. தமிழக முதலமைச்சரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு, பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தமிழக மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு உள்ள வாய்ப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல்வேறு துறைகள் குறித்தும், வங்கி மற்றும் வங்கி கடன் பெறுதல் உள்ளிட்ட அறிவிப்பினை அனைவரும் பெறும் வகையிலும் தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெறும் வகையில் நான் முதல்வன் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 'நான் முதல்வன்' இணைய முகப்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், நிறுவனங்கள் மூலமாக தரக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் வழங்கும் உதவித் தொகைகள் பற்றிய விவரங்களும் நான் முதல்வன் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.


மாணவர்களுக்கு இந்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதலமைச்சரால் நான் முதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மாணவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.