Skip to main content

ரயில் நிலையங்களில் சுகாதாரமின்மை; துறை ரீதியான நடவடிக்கை வேண்டும்-நீதிமன்றம் அதிரடி!!

Published on 28/09/2018 | Edited on 28/09/2018

 

highcourt

 

ரயில்களில் வழங்கப்படும் போர்வைகளை சுத்தப்படுத்தும் பணி தொடர்பான 14.83 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் ஒதுக்கியதை ரத்து செய்த சேலம் கோட்ட மேலாளர் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை தி.நகரை சேர்ந்த பிரீமியர் கார்மெண்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், டெண்டர் ஒதுக்கப்பட்ட 21 நாட்களில் பணிகள் தொடங்கப்படவில்லை என்ற காரணத்திற்காகவே டெண்டர் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்ததை ஏற்றும், மறு டெண்டர் நடைமுறை பங்கேற்கலாம் என்று அறிவுறுத்தியும் வழக்கை முடித்து வைத்துள்ளார்.

 

அந்த வழக்கில், ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் சுகாதாரமின்மை தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்ததுடன், நீதிபதி  சில உத்தரவுகளையும் பிறபித்துள்ளார்.தெற்கு ரயில்வே பொது மேலாளர் அல்லது உயர் அதிகாரிகளின் அறைகள் உச்சபட்ச சொகுசுடனும், சுத்தத்துடனும் பராமரிக்கப்படும்போது, அதற்கு காரணமான பயணிகள் பயணிக்கும் ரயில்களை குறைந்தபட்ச சுகாதாரத்துடன் வைத்திருக்க வேண்டாமா? அவ்வாறு கிடைக்காதது அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லியுள்ள சுகாதார உரிமைகளுக்கு எதிரானதாகும்.

 

highcourt

 

இந்திய ரயில்வே பல்வேறு விதிமுறைகளை உருவாக்கியுள்ள நிலையில், அவற்றை முழுமையாக அமல்படுத்தி ரயில், ரயில் நிலையங்களை சுகாதாரத்துடன் காக்க வேண்டிய கடமை அதிகாரிகளுக்குதான் உள்ளது. சுகாதாரமின்மைக்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதல் வகுப்பில் வழங்கப்படும் போர்வைகள், தலையணை ஆகியவை முறையாக சுத்தம் செய்யபடாமல் துர்நாற்றத்துடன் உள்ளது. சில ரயில் பெட்டிகளில் எலி, கரப்பான்பூச்சி ஆகியவை ஓடுகின்றன. ரயில்கள் சுத்தமாக இல்லை என ஏராளமான  புகார்கள் வருவதாகவும், அவற்றில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

 

அதிகாரிகள் அலட்சியம்  காட்டி வருவதாலும், ரயில் மற்றும் ரயில் நிலையங்களை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தெற்கு ரயில்வே பொது மேலாளர் எடுக்க வேண்டும்.

 

சுகாதாரம் இல்லாமல் இருக்கும் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் குறித்து புகார் அளிக்க தனி தொலைபேசி எண்களை ஏற்படுத்தி, அதை முறையாக விளம்பரப்படுத்த வேண்டும். இந்த தொலைப்பேசி எண்களை ரயில் பெட்டிகளுக்கு உள்ளேயும், ரயில் நிலையங்களிலும் விளம்பரப்படுத்த வேண்டும்.

 

ரயில்வே அதிகாரிகள் பெறும் சலுகைகள், விளையாட்டு மைதானங்கள், கிளப்புகள் ஆகியவை பயணிகளின் மற்றும் வரி செலுத்துவோரின் பணத்தையும் கொண்டுதான் என்பதை உணர்ந்து அவர்களுக்கும் உரிய உரிமைகள் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரயில்வே ஊழியர் சங்கங்களும் தங்கள் கடமையை உணர்ந்தும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும் தங்கள் சங்கத்தினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மக்களின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

 

 

நாட்டிற்கு இந்திய ரயில்வேயின் பணியின் சேவை மிகப்பெரியது என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் பயணிகளுக்கு தேவையான சேவைகள் முழுமையாக கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.ஒருங்கிணைப்பு மற்றும் நேர்மையான அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்களை தெற்கு ரயில்வே பொது மேலாளர் உருவாக்கி, ரயில் மற்றும் ரயில் நிலையங்களின் சுகாதாரம், உணவு பாதுகாபு, பயணிகள் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பான உரிய உத்தரவுகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் பிறப்பிக்க வேண்டும்.

 

உத்தவுகளை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கை 12 வாரம் கழித்து பட்டியலிடவும் உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

ரயிலில் செல்போன்கள் திருட்டு; ஆந்திர வாலிபர் கைது

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cell phones stolen from train passengers; Andhra youth arrested

ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

ஈரோட்டில் ரயில் நின்றபோது முகமது ஜாசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியைச் சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.