Skip to main content

மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க வருவியா?-போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்!

Published on 13/06/2021 | Edited on 13/06/2021

 

hydrocarbons again? -Farmers in struggle!

 

கடந்த 2017 பிப்ரவரி 15 ந் தேதி தமிழகத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அறிவித்த போது 16 ந் தேதி நெடுவாசல் கடைவீதியில் தொடங்கிய போராட்டம் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், அரசியல் கட்சிகள், சினிமா நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என 22 நாட்கள் தொடர் போராட்ட திருவிழா நடத்தினார்கள்.

 

அப்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் திட்டம் கைவிடப்படுவதாக உத்திரவாதம் கொடுத்ததால் முதல்கட்ட போராட்டம் 22 நாளில் முடிவுக்கு வந்தது. இதே காலகட்டத்தில் அருகில் உள்ள நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடகாடு ஆகிய ஊர்களிலும் போராட்டம் நடந்தது.

 

ஆனால் மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை மறந்து ஜெம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து போட்டதால் ஏப்ரல் 12 ந் தேதி மீண்டும் நெடுவாசல் போராட்டம் தொடங்கியது.  அப்போராட்டம் 174 நாட்கள் தொடர்ந்தது. அப்போது அந்தப் போராட்டத்தின் போது வடகாடு, கருக்காகுறிச்சி, நல்லாண்டார்கொல்லை, கறம்பக்குடி ஆகிய ஊர்களில் ஏற்கனவே ஓ.என்.ஜி.சியால் அமைக்கப்பட்டுள்ள ஆழமான ஆழ்குழாய் கிணறுகளை பாதுகாப்பாக அகற்றி நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் கணேஷ் எழுதிக் கொடுத்தார்.

 

hydrocarbons again? -Farmers in struggle!

 

இப்படியே 196 நாட்கள் போராட்டம் நடந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த போராட்டம் குறித்து கீரமங்கலம், வடகாடு, ஆலங்குடி காவல் நிலையங்களில் விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆலங்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் 2019 ம் ஆண்டு காவிரி பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படாது என்றும் கூறியிருந்தனர்.

 

ஆனால் தற்போது ஜூன் 10 ந் தேதி மத்திய அரசு இந்தியா முழுவதும் 75 புதிய எரிவாயு கிணறுகளுக்கான டெண்டர் விட்டுள்ளது. அதில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வடதெரு என்று ஒரு இடமும் மன்னார்வளைகுடா பகுதிகளையும் இணைத்திருந்தது. இந்த தகவல் வெளியான நிலையில் கருக்காகுறிச்சி வடதெருவில் உள்ள எண்ணெய் கிணற்றுக்கு எரிவாயு எடுக்க வராதே என்று கோட்டைக்காடு பகுதி விவசாயிகள் முதல்கட்டமாக அரை நிர்வாண போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கருக்காகுறிச்சி விவசாயிகள் ''தமிழக அரசு இத்திட்டம் வராமல் தடுக்கும் வேண்டும். இல்லை என்றால் மீண்டும் பெரிய போராட்டம் வெடிக்கும்'' என்கின்றனர்.

 

தமிழகத்தை மீண்டும் போராட்டக்களமாகிவிட்டது மத்திய அரசு.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.