Skip to main content

'ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் தமிழர்களின் அடையாளம் அழியும்!' - கலங்கும் போரட்டக்காரர்கள்

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அழியப்போவது விவசாயமும், மீன் பிடி தொழிலும் மட்டுமல்ல, தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும், கட்டிடக்கலைகளும், வரலாற்று ஆவணங்களும் சேர்த்தேதான் அழிக்கப்படும் என்று வேதனை கொள்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

Hydrocarbon issue

 



ஹைட்ரோகார்பன் திட்டத்தை மூன்று மண்டலமாக பிரித்து அதனை எப்படியும் எடுத்துவிடுதற்கான வேலையை விரைவுபடுத்தி வருகிறது மத்தியஅரசு. விலைமதிப்பில்லாத ஹைட்ரோ கார்பனை எடுக்க 1992- 93 ஆண்டுகளிலேயே கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னோட்ட பணிகள் நடந்தது. அதனை ஓ,என்,ஜி,சி குருடாயில் எடுக்கிறது என்று மேலோட்டமாக பேசப்பட்டது. அந்த சமயத்தில் ஓ,என்,ஜி,சி நிறுவனம் ரஷ்ய வல்லுனர்களின் துணையுடன் தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பூமிக்கடியில் இருக்கும் கனிமங்களை கண்டறிந்தது. 

அதன்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பாகூர் முதல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வரை 28,000 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரியும் 98 ஆயிரம் கோடி கன மீட்டர் அளவிற்கு எரிவாயுவும், 4 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஹைட்ரோ கார்பனும் இருப்பதாக அப்போதே கண்டுபிடித்த மத்திய அரசு அதை எடுக்கவே பல்வேறு முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

 

 

முதற்கட்டமாக ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்காக வரும்காலத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்றது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் திட்டத்தை செயல்படுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற தேவையில்லை என விதிகளை திருத்தி அனுமதியளிக்க மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. இதில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ள 55 மண்டலங்களில் வேதாந்தா குழுமத்திற்கு மட்டுமே 41 இடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கெயில் நிறுவனத்திற்கு ஒன்று, ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு 9. ஹிந்துஸ்தான் எண்ணெய் ஆய்வு நிறுவனத்திற்கு 1 ஒ,என்,ஜி,சி நிறுவனத்திற்கு 2. பாரத் எண்ணெய்வள நிறுவனத்திற்கு 1 என 55 மண்டலங்களை உருவாக்கி பிரித்துக்கொடுத்துவிட்டது.

தமிழகத்தில் மூன்று மண்டலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றினால் விவசாய மட்டுமின்றி வனப்பகுதிகள், நீர்நிலைகள், பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலாத் தலங்கள் என தமிழர்களின் பண்பாடும் சேர்ந்தே அழிந்தொழியும் நிலை ஏற்பட்டுவிடும். இதற்கு தமிழக அரசு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் அளித்து திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்க வேண்டும் என திமுக, மீத்தேன் எதிர்ப்புக்கூட்டமைப்புகள், என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 



மீத்தேன் திட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட எட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மிகப்பெரிய அளவில் ஆர்பாட்டம் செய்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில், அதன் ஒருங்கினைப்பாளர் பேரா,ஜெயராமன் தலைமையில் மயிலாடுதுறையில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 16 பேர் மீது வழக்கும் பதிவாகியுள்ளது. போராட்டத்தை முன்னெடுப்பவர்களோ, "இது எங்களுக்கான பிரச்சனையில்லை, விவசாயிகள், மீனவர்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல, தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டுக்கான பிரச்சனை உடனே திரண்டு வந்து திட்டத்தை முறியடிக்கவேண்டும்" என முழக்கமிட்டனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அரசிடம் சரணடைந்த எடப்பாடி பழனிசாமி: கே.என். நேரு கடும் கண்டனம்

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

 

“டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா, ஓன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டிக்க துணிவில்லாத, அதற்கு மக்களிடம் கருத்துக் கேட்பதோ, சுற்றுச் சூழல் அனுமதியோ கூடத் தேவையில்லை என அமைச்சர் மூலமாக கடிதம் எழுதி மத்திய அரசிடம் சரணடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்ததாக அபாண்டமாக பொய் கூறுவதா?” என்று முன்னாள் அமைச்சரும் தலைமைக் கழக முதன்மைச் செயலாளருமான கே.என். நேரு, எம்.எல்.ஏ.,  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

K. N. Nehru



இதுதொடர்பாக கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், 18,650 கோடி ரூபாய் மதிப்பில் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியில் பல்வேறு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை  அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்க இன்றுவரை துணிச்சல் இல்லாத முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி, எங்கள் கழகத் தலைவர் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்தார் என்று அபாண்டமாக- அப்பட்டமான பொய் பேசுவதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

 “நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்து” “கதிராமங்கலத்தில் போராடிய விவசாயிகளைக் கைது செய்து” “ நெடுவாசல் போராட்டத்திற்காக சேலத்து மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தை ஏவி விட்டு”“விவசாயிகளுக்காகப் போராடிய  பேராசிரியர் ஜெயராமனை தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்து”விவசாயிகளின் மீது அடக்குமுறையையும், அராஜகத்தையும் கட்டவிழ்த்து விட்ட முதலமைச்சருக்கு எங்கள் கழகத் தலைவர் பற்றிக் குறை கூற எந்த யோக்கியதையும் இல்லை.
 

சட்டமன்றக் கூட்டத்தில் எங்கள் கழகத் தலைவர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில் எல்லாம் “நாங்கள் அனுமதிக்கமாட்டோம்”என்று பொய் சொன்ன அமைச்சர்களும், முதலமைச்சரும், வேதாந்தாவிற்கும், ஓன்.சி.ஜி.க்கும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதற்கு அனுமதி கொடுத்த போது வாய் மூடி மவுனிகளாக இருந்தது ஏன்?


 

“மக்கள் கருத்து” கேட்க வேண்டியதில்லை, “சுற்றுப்புறச்சூழல் அனுமதி முன்கூட்டியே பெற வேண்டியதில்லை” என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சரை இன்றுவரை பதவி நீக்காதது ஏன்? காவிரி டெல்டாவிற்கு எதிராக அதிமுக அரசு செய்யும் துரோகத்தை எங்கள் கழகத் தலைவர் சுட்டிக்காட்டிய பிறகு கூட இன்று வரை அப்படி  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எழுதிய கடிதத்தை திரும்பப் பெறவோ, அதற்கு ஒரு விளக்கம் சொல்லவோ அஞ்சி நடுங்கி ஒடுங்கிப் போயிருக்கும் முதலமைச்சர், தனக்கு அரசு விழா கிடைத்து விட்டது என்பதற்காக தி.மு.க. மீது சேற்றை வாரி இறைப்பதை எந்த தி.மு.க. தொண்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
 

அதிமுக அரசுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றுவதில் உடன்பாடு இல்லை என்றால் இதுவரை “ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதிக்காதீர்கள்” என்று எந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்காவது முதலமைச்சர் உத்தரவு போட்டிருக்கிறாரா? தைரியம் இருந்தால் அப்படி போட்ட உத்தரவை அவரால் வெளியிட முடியுமா? “ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம்” என்று ஒரு அமைச்சரவை தீர்மானம் போடுங்கள் என்று எங்கள் கழகத் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இன்றுவரை அப்படியொரு தீர்மானம் போடுவதற்கு வலிமை இருக்கிறதா? நெடுவாசல் போராட்டக் காரர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் மன உறுதி கூட இல்லாத முதலமைச்சர், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக வீண்பழி சுமத்தி விளம்பரம் தேடிக் கொள்ள நினைப்பது வெட்கக் கேடாக இல்லையா?
 

மத்திய பா.ஜ.க. அரசு – தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு - தமிழகத்தில் உள்ள  பல்வேறு மாவட்டங்களில்  ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து விட்ட பிறகு, “ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டோம்”என்றும், “கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியே பெற வேண்டியதில்லை”என மத்திய பா.ஜ.க. அரசு கூறிவிட்ட நிலையில், “நாங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம்” என்றும் முதலமைச்சர் பேசியிருப்பது ஏமாற்று வேலை. நீட் தேர்வை விட மாட்டோம் என்று தமிழக மக்களை ஏமாற்றியது போல் இன்றைக்கு விவசாயிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.  காவிரி டெல்டா விவசாயிகளுக்கு  செய்துள்ள பச்சை துரோகத்தை திசைதிருப்ப, “காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்” என்று இன்று முதலமைச்சர் சேலத்தில் அறிவித்திருக்கிறார்.


 

துயரப்படும் விவசாயிகளின் கடன்களைக் கூடத் தள்ளுபடி செய்ய மனமின்றி - “கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்”என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடிக் கொண்டிருக்கும் முதலமைச்சர், காவிரி டெல்டா விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுவது போல் ஒரு கபட நாடகத்தை இன்று அரங்கேற்றியிருக்கிறார். இப்படியெல்லாம் கூறிவிட்டால், 131 விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணமாகவும் - அவர்களின் மீது காவல்துறையை வைத்து அராஜகத்தை ஏவி விட்டதற்குப் பொறுப்பானதுமான அதிமுக ஆட்சியின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்று முதலமைச்சர் கனவு கண்டால் - அது பகல் கனவாகவே முடியும்.
 

ஆகவே, காவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக”அறிவிக்கும் முன்பு - முதலில் “ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்”என்று ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும்; ஏற்கனவே வேதாந்தா மற்றும் ஓன்.சி.ஜி.சி. நிறுவனங்களுக்கு தமிழகத்தில் - குறிப்பாகக் காவிரி டெல்டா பகுதிகளில் அளித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்; அது மட்டுமின்றி, “ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க “மக்கள் கருத்துக் கேட்பு”கூட்டமும், “சுற்றுச்சூழல் அனுமதியும்” தேவையில்லை என்று தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் திரு கருப்பண்ணன் எழுதிய கடிதத்தை நாளையே திரும்பப் பெறுவதற்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; இவற்றை எல்லாம் செய்து விட்டு, பிறகு “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக” அறிவிக்கப்படும் என்று இப்போது அளித்துள்ள வாக்குறுதியை - மத்திய பா.ஜ.க. அரசுக்கு அஞ்சி பின்வாங்கி விடாமல் வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றும்  கேட்டுக் கொள்கிறேன்.

 

mks-eps


 

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஒரு புறம் பணிகள் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டு மற்றொரு புறம் “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பேன்” என்று  கூறி முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி “இரட்டை வேடம்” போட வேண்டாம்  என்று வலியுறுத்திக்  கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

Next Story

ஹைட்ரோ கார்பன் எடுத்தால் குடிக்க தண்ணீர் கிடைக்காது! அமெரிக்க ஆய்வு

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

லகிலேயே அதிக அளவில் எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகள் உள்ள நாடு அமெரிக்கா. 2016 கணக்குப் படி, ஏறத்தாழ 17 லட்சம் எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகள் அமெ ரிக்காவில் மட்டும் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளன. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து எரிவாயு எடுக்கப்படுவதால் ஏற்படும் கேடுகளைப் பற்றிய ஆராய்ச்சி, கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவில் தீவிரப்படுத்தப்பட்டது. ஏனென்றால், இந்த எரிவாயுக் குழாய்க் கிணறுகளுக்கு அருகாமையில் வாழும் மக்கள் தங்களின் குடிநீர் ஆதாரங்கள் மாசடைந்து விட்டதாக அரசாங்கத்திடம் புகாரளித்தார்கள்.

ஹைட்ரோ கார்பன் ஆழ்துளைக் கிணறுகள்

hyy


1990-களில்தான் தரைப் பகுதிகளில், பல நூறு மீட்டர் ஆழத்தில் உள்ள பாறைகளின் இடுக்குகளிலும், ஓட்டைகளிலும் நிரம்பியிருந்த எரிவாயுவை வெளிக் கொணரும் முறை வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கியது. இந்த முறைக்கு பாறை "உடைப்பு'’ (Fracturing or Fracking) என்று பெயர். பொதுவாக செங்குத்து ஆழ் துளைக் கிணறுகளைத்தான் அமைப்பார்கள். ஒரு நூறு மீட்டர் தடிமனுள்ள படிவத்தில் அந்தத் தடிமனுக்கு மட்டுமே எரிவாயு உற்பத்தி ஆகும். பக்கத்தில் உள்ள படிவத்திற்கு இன்னொரு ஆழ்துளைக் கிணறு துளையிட வேண்டும். தொடர்ந்த ஆராய்ச்சியின் பயனாக, செங்குத்து ஆழ்துளைக் கிணற்றுத் துளைகள் எரிவாயுப் படிவத்தின் மையப்பகுதிக் குச் சென்றவுடன், அதனைப் பக்கவாட் டில் ‘"ட'னா வடிவத்தில் திருப்பி, துளை யிடும் முறையை உருவாக்கினார்கள்.

இம்முறையில் ஒரே ஒரு செங்குத்து ஆழ்குழாய்க் கிணற்றின் மூலம் பல பக்கவாட்டுத்துளைக் கிணறுகளைத் துளையிடலாம். இன்றைக்கு ஹைட்ரோ கார்பன் எரிவாயு ஆய்வுக்காக பல்லாயிரக் கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவு அனுமதிக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் பல பக்கவாட்டுத் துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்த பரந்த நிலப்பரப்பு முழுவதும் 600 மீ., 900 மீ., 1400 மீ. என பந்நிலை ஆழங்களில் சல்லடையாகத் துளைக்கப்படும். இம்முறையால், நில நடுக்கங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எரிவாயு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டால், மாதிரிப் படத் தில் காட்டப்பட்டுள்ளதைப் போல ஆழ்துளைக் கிணறுகள் அமைய வாய்ப்புகள் மிகஅதிகம். இந்த மாதிரிப் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் 2016-ல் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக் கின்றன.

hy

அமெரிக்க ஆய்வு

2008-ல், அமெரிக்காவின் வையோ மிங் மாநிலத்தின், பெவிலியன் என்ற இடத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் குடிநீர் மாசடைந்து விட்டதாக அரசாங்கத்திற்குப் புகாரளித்தார்கள். அதே போல், எங்கெங் கெல்லாம் ஹைட்ரோ கார்பன் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு எரிவாயுவும் கச்சா எண்ணெயும் எடுக்கப் படுகிறதோ அந்த மாநிலங்களில் எல்லாம் தங்கள் குடிநீர் கெட்டு விட்டதாக அரசாங்கத்திடம் முறையிட்டார்கள். அரசு, அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மை (The U.S. Environmental Protection Agency EPA) நிறுவனத்தை இது குறித்த ஆய்வை மேற்கொள்ளப் பணித்தது. அதன் தலைமை விஞ்ஞானியாக, தலை சிறந்த சுற்றுபுறச் சூழல் விஞ்ஞானியான டொமினிக் டிஜோலியோ (Dominic DiGiulio) அவர்களை நியமித்தது. எண்ணெய் நிறுவனங் களோ எண்ணெய் எரிவாயுக் கிணறுகளால் குடிநீர் மாசுபடவில்லை எனக் கூப்பாடு போட்டன. தன் முதல் கட்ட அறிக்கையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளால் குடிநீர் மாசு படுவதற்குண்டான கார ணங்கள் உள்ளன என அறிவித்த நிலையில், டொமினிக் 2014-ல் ஓய்வு பெற்றார். அமெரிக்க அம்பானிகள், வேதாந்தாக்கள், அதானிகள், டிக்செய்னிகள் போன்ற பண முதலைகள் பல வழிகளிலும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். உடனே, அந்த ஆய்வுப் பணிகளில் ஒரு தொய்வு ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மை அறிக்கை
tt
ஆழ்துளை ஹைட்ரோ கார்பன் கிணறுகளில், தண்ணீரையும், வேறு சில இரசாயனப் பொருட்களையும் மிக அதிக அழுத்தத்தில் செலுத்தி எரிவாயு உள்ள படிவங்களை உடைப் பார்கள். இம்முறைக்கு ‘"நீரழுத்தப் பாறை உடைப்பு'’(Hydraulic Fracturing) என்று பெயர். 2015-ல் அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முக வாண்மை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ‘"நீரழுத்தப் பாறை உடைப்பு'’ முறையால், அமெரிக்க குடிநீர் ஆதாரங்கள் பரவலாகப் பாதிக்கப்படவில்லை'' என்ற முந்தைய முதல் அறிக்கைக்கு முரணான அறிக்கையை வெளியிட்டது. ஆனால், அதற்கு எந்த ஆதாரத்தையும் வெளியிட வில்லை.

இவ்வறிக்கை, அமெரிக்க விஞ்ஞானிகளிடையே பெரும் எதிர்ப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. ஊடகவியலாளர்கள், விஞ்ஞானிகள் என்று எவர் எழுப்பிய கேள்விகளுக்கும் அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மை பதிலளிக்க மறுத்து விட்டது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் “""முகவாண்மை வெளியிட்ட அறிக்கையின் முடிவுகள் சந்தேகத்திற்கிட மானவையாக இருக்கிறது'' என்று அறிக்கை அளித்தார்கள்.

டொமினிக் டிஜோலியோ (Dominic DiGiulio) அறிக்கை

2014-ல், அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மையிலிருந்து ஓய்வு பெற்ற டொமினிக் டிஜோலியோ, அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றான ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார்.

தான் அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். தன்னுடைய ஆராய்ச்சி முடிவை 2016-ல் வெளியிட்ட டொமினிக், “""ஹைட்ரோ கார்பன் ஆழ்துளைக் கிணறுகளில் ‘"நீரழுத்தப் பாறை உடைப்பு'’ முறையால் எரிவாயு எண்ணெய் எடுக்கும் பொழுது குடிநீர் கெடும்'' என்றார். அறிவியல் அமெரிக்கன்’The Scientific American என்ற அறிவியல் இதழில் காயத்ரி வைத்தியநாதன் என்னும் கனடா நாட்டு சுற்றுப்புறச் சூழல் ஊடகவிய லாளர் இச்செய்தி யைத் தாங்கிய கட்டுரையை எழுதி னார்.

ஆழ்துளைக் கிணற்றில் செலுத்தப்படும் இரசாயனங்கள்

ஹைட்ரோ கார்பன் ஆழ் துளைக் கிணற்றில் 62 வகையான விஷ இரசாயனப் பொருட்கள் செலுத்தப்படுகின்றன. அவற்றில் மெத்தனால், டீசல், ஹைட்ரோகுளோரிக் ஆசிட், அம்மோனியம் குளோரைடு, பாஸ்பானியம் சல்ஃபேட், சோடியம் குளோரைடு (உப்பு), மக்னீசியம் பெராக்சைடு, கால்சியம் குளோரைடு, ஆர்செனிக், பென்சீன், ஃபார்மால்டிஹைட் (இறந்த உடல்களைப் பதப்படுத்தும் இரசாயனம்), காரீயம், பாதரசம் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை (முழு விவரத் திற்கு https://fracfocus.org/chemical use/what chemicals are used என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்). இரசாயனங்கள் மட்டுமன்றி மணலும் செலுத்தப்படும். ‘பாறை உடைப்பு திரவத்தில் 10% மெதனால் இருப்பதாக, டொமினிக் டிஜோலியோ குறிப்பிடுகிறார்.

hh

இப்படி செலுத்தப்படும் இரசாயனங்கள் மீண்டும் கழிவாக வெளியே கொண்டு வரப்படும். இந்தக் கழிவுகளைக் கொட்டி வைக்கக் கூடிய இடங்களிலிருந்து கசியும் இரசாயனங்கள் தரையிலிருந்து கீழ்நோக்கி நிலத்தடி நீர்மட்டத்தை நோக்கிப்போகும். அதேபோல், தரையின் கீழே நூற்றுக்கணக்கான மீட்டர் ஆழத்தில் உடைக்கப்பட்ட படிவங்களிலிருந்து பாறை இடுக்குகளின் வழியே மேல்நோக்கி வரும். இப்படி, மேலும் கீழும் என இருபக்கமும் இருந்து விஷ இரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலந்து நிலத்தடி நீர் முழுவதையும் பாழாக்கிவிடும்.

குடி நீர், பாசன நீர் எல்லாம் பாழாய்ப் போனால், இந்த ஹைட்ரோ கார்பன் ஆழ்துளைக் கிணறுகள் உள்ள பகுதி முழுவதும் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும்.

அமெரிக்காவின் வையோமிங்க் மாநிலத்தில் உள்ள விண்ட் ஆற்றுப்படுகையில் (Wind River Formation) ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க 600 மீ., 1200 மீ. ஆழத்தில் உள்ள பாறைகளை “நீரழுத்த முறையினால் உடைத்ததனால் அதன்வழி எழுந்த, கலந்த இரசாயனங்கள் நீரில் கலந்து நிலத்தடி நீர் கெட்டுவிட்டது என்று நாங்கள் காட்டியுள்ளோம்'' என்கிறார் டொமினிக் டிஜோலியோ.

வேதியியல் ஆய்வுக்கூடங்கள் இல்லை

yy


""நீரில் கரையும் இந்த நச்சு இரசாயனங்களை ஆய்வு செய்வதற்குப் போதிய வசதிகளைக் கொண்ட வணிகமுறை வேதியியல் ஆய்வுக் கூடங்கள் அமரிக்காவிலேயே இல்லை'' என்கிறார் டொமினிக். ""ஆகவே, நாங்கள் இந்த நீரில் கரையும் இரசாயனங்களை அளவீடு செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்கினோம்'' என்கிறார். டொமினிக்கும் அவருடைய சக ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து புது ஆய்வு முறைகளை உருவாக்கினார்கள். அதன்படி, உயர்திறன் திரவ நிற ஆய்வியல் (High Performance Liquid Chromatography) முறையின் மூலம் நிலத்தடி நீரிலும், குடிநீரிலும் கலந்திருந்த நச்சுப் பொருட்களைக் கண்டறிந்தார்கள்.

மெத்தனால்

மெத்தனால் என்பது ஒருவகை மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம். குறிப்பிட்ட அளவைத் தாண்டினால், நிரந்தர நரம்பு மண்டலத்தாக்கத்தோடு கண்களையும் குருடாக்கி விடும். “""இந்த வகை இரசாயனம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்த இடங்களுக்கு அருகில் குடிநீரில் கலந்திருந்ததைக் கண்டுபிடித்தோம்; அதே போல டீசல், உப்பு ஆகியவையும் கலந்திருந்ததைக் கண்டு பிடித்தோம்; இவை எரிவாயுவை மேலே கொண்டு வரும் பொழுது அதனுடன் வெளிவரும் கழிவுகளில் இருந்தும் நிலத்தடி நீரில் கலக்கிறது. அதே போல் மிகுந்த ஆழத்தில் இருக்கக்கூடிய நிலத்தடி நீரில் உப்பு மிக அதிக அளவில் அதிகரித்திருப்பதையும் இந்த ஆய்வில் கண்டறிந்தோம்'' என்றும் டொமினிக் அறிவித்தார்.

பெரும் நீர்ச் செலவு

""ஹைட்ரோகார்பன் ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்க பிரம்மாண்டமான அளவில் நல்ல தண்ணீர் தேவைப்படும். அமெரிக்க புவியியல் ஆய்வுத்துறை, “ஒருமுறை ‘அதிக நீரழுத்த முறையில்’ எரிவாயு – எண்ணெய்ப் படிவங்களை உடைக்க சராசரியாக 3 கோடியே 63 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது'' என்று அறிவித்திருப்பதாக "தி அமெரிக்கன் சைன்டிஸ்ட்' செய்தி கூறுகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு ஹைட்ரோ கார்பன் கிணற்றில் 10 முறை, எரிவாயு எண்ணெய்ப் படிவங்களை அதிக நீரழுத்த முறையால் உடைத்தால் 36 கோடியே 3 லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் செலவாகும். இது ஒரு செங்குத்து ஆழ்துளைக் கிணற்றுக்குத்தான். ஒரு செங்குத்துக் கிணற்றில் 5 பக்கவாட்டு துளைக் கிணறுகளை அமைத்தால் மொத்த தண்ணீர் செலவு 180 கோடியே 15 லட்சம் லிட்டர். ஒரு முப்பது இடங்களில் தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் இது போன்ற ஆழ்குழாய் ஹைட்ரோ கார்பன் எரிவாயுக் கிணறுகளை அமைத்தால் ஆகும் தண்ணீர் செலவு 5404 கோடியே 50 லட்சம் லிட்டர். அதாவது ஏறத்தாழ 2 டி.எம்.சி. தண்ணீர். ஒரு டி.எம்.சி. தண்ணீருக்கும் 2 டி.எம்.சி. தண்ணீருக்கும் கர்நாடகாவிடம் மடிப்பிச்சை ஏந்த வேண்டிய நிலையில் உள்ள தமிழகத்தில் இது சாத்தியமா? தேவையா?

நியூயார்க் மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் குடிநீர் ஆதாரங்கள் மாசடைந்து பாழாவதால், ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய்களை அமைத்து எரிவாயுவையும் எண்ணெயையும் எடுக்க நியூயார்க் மாநிலம் தடை விதித்துள்ளது. மாபெரும் பணபலம் படைத்த எண்ணெய் நிறுவனங்கள் தங்களது ஆழ்துளைக் கிணற்றின் உற்பத்தி முறையால் ‘குடிநீர் மாசுபடவில்லை’ என்று பல ஆய்வறிக்கைகளைத் தயாரித்து அளித்துப் பார்த்தார்கள். ஆனால், நியூயார்க் மாநில அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆகவே, அமெரிக்க ஆய்வுகளின் அடிப்படையில், தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எண்ணெய்க் கிணறுகளை அமைத்து, காவிரி மண்டலத்தின் நிலத்தடி நீரை உறிந்து, எஞ்சியுள்ள நிலத்தடி நீரை விஷமாக்கி, அந்தப் பகுதியையே பாலைவனமாக்க தமிழக ஆட்சி யாளர்கள் துணை போகக்கூடாது.


-டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், Ph.D.,
ஆஸ்திரேலியா.