Skip to main content

ஹைட்ரோ கார்பன் வேண்டாம், கடைமடை வரை காவிரி வேண்டும்!! வீட்டு வாசலில் விளக்கேற்றிய மக்கள்.

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்டங்களை கொண்டு வந்து பொன் விளையும் பூமியை மலடாக்க வேண்டாம் என்று பல வருடங்களாக விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் போராடி வந்தனர்.
 

hydrocarbon issue


இந்த நிலையில் தான் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவித்த நிலையில் தான் ஒட்டு மொத்த தமிழகமும் போராட்டக்களமானது. நெடுவாசலில் 196 நாட்கள் தொடர் போராட்டங்கள் நடந்தது. நெடுவாசல் போராட்டம் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் சினிமா துறை, மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகளையும் இழுத்து வந்தது. 

அந்த போராட்டத்தை பார்த்த பிறகு மத்திய மாநில அரசுகள் திட்டம் வராது என்று போராட்டக் களத்திலேயே வந்து உறுதியளித்தனர். ஆனாலும் திட்டத்தை விலக்கிக் கொள்ளவில்லை. தொடர்ந்து போராடிய விவசாயிகள் கிராம சபைக் கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். அதன் பிறகு டெல்டா மாவட்டங்களில் திட்டங்களை செயல்படுத்து முயன்று வருகிறது.


போராட்டக்காலங்களில் சொந்த ஊருக்கு வந்த இளைஞர்கள் மீண்டும் பணிகளுக்கு திரும்பியுள்ள
நிலையில், ஹைட்ரோ கார்பன் வேண்டாம் கடைமடை வரை காவிரியை பாயவிடுங்கள் என்ற கோரிக்கையை வலியுத்தி டெல்டா மாவட்டங்களில் நெடுவாசல், பேராவூரணி உள்பட பல கிராமங்களில் விவசாயிகள் தங்கள் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

இந்த கோரிக்கை மத்திய அரசு வரை சென்றுள்ளது. ஆனால் இனியாவது தான் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க வேண்டும்’ - விவசாயிகள் கோரிக்கை!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

‘Hydrocarbon extraction should be banned’ - Farmers demand

 

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படாது என மாவட்ட நிர்வாகமும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரும் அண்மையில் உறுதியளித்திருந்த நிலையில், மீண்டும் மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அரியலூர் மாவட்டம் என்பது டெல்டா பகுதிகளில் வருகிறது. மேலும், அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்கப்பட்டால், புதுக்குடி குருவாலப்பர் கோயில் உள்ளிட்ட இடங்களில் வேளாண் நிலங்களும் அருகில் கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட புராதன சின்னங்களும், கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இராசேந்திர சோழனின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்ட சோழகங்கம் எனும் பொன்னேரி உட்பட பல்வேறு நீர்நிலைகள் வரண்டுவிடும் நிலை ஏற்படும்.

 

புதுக்குடி கிராமங்களில் ஆயிரக்கணக்கான கிணறுகள் உள்ளன. அவற்றில் தண்ணீர், தேன் போன்ற அருமையான சுனை நீர் ஆகியவை உள்ளன. அத்தகைய தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்துவருகின்றனர் விவசாயிகள். ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தால், புதுக்குடி கிராமங்களில் நீரூற்றுகள் அழிக்கப்படும் நிலை உருவாகி, விவசாயிகள் விவசாயம் செய்வதை விடுத்து ஊரைக் காலி செய்யும் நிலை உருவாகும். எனவே தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டினை அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சார்பில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் அறிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

Next Story

“தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் பணிகள் நடைபெறவில்லை” - கனிமொழி எம்பிக்கு மத்திய அமைச்சர் பதில்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

"Hydrocarbon works are not taking place in Tamil Nadu" - Union Minister's reply to Kanimozhi MP

 

தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம் 2020 நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் உறிஞ்சும் பணிகளுக்கான ஏலத்தை தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கிணங்க ரத்து செய்ய ஒன்றிய அரசு பரிசீலிக்கிறதா? என்று மக்களவையில் திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ரமேஷ் தெலி, ஆகஸ்ட் 2ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

 

அந்தப் பதிலில், “இந்திய அரசாங்கம் 2021 ஜூன் 10ஆம் தேதி, கண்டுபிடிக்கப்பட்ட சிறிய அளவிலான நிலப்பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுத்தல் பணிக்காக மூன்றாவது சுற்று ஏலத்தை அறிவித்தது. இந்தியா முழுவதும் 75 இடங்களில் 13,204 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கான 35 ஒப்பந்தங்களைக் கோரி இந்த ஏலம் அறிவிக்கப்பட்டது. இவற்றில் இரு பெட்ரோலிய  சுரங்க குத்தகையை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தம்  தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை வடத்தெரு ஆகிய பகுதிகளில் போடப்பட்டிருக்கிறது. இந்த இரு பெட்ரோலிய சுரங்க குத்தகைகளும் 2007 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது. எண்ணெய் வயல்கள் முறைப்படுத்துதல் விரிவாக்கல் சட்டம் 1948 , பெட்ரோலிய இயற்கை எரிவாயு விதிகள் 1959 ஆகியவற்றின் கீழ் இவை வழங்கப்பட்டன. இப்போது தமிழ்நாட்டில் எந்த ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுத்தல் பணியும் நடைபெறவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார் அமைச்சர் ரமேஷ் தெலி.