Skip to main content

மேலும் 32 வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன்... இரண்டாம், மூன்றாம் சுற்றுக்கு அனுமதியளித்த மத்திய அரசு... அதிர்ச்சி தகவல்!!

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

தமிழகத்தில் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரண்டாம், மூன்றாம் சுற்றாக நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் புதியதாக ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ள தகவல்  மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 Hydrocarbon in 32 more circles in Tamil Nadu... Shock info !!


திறந்தவெளி அனுமதி அளிக்கும் முறையில் ஓ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி நிறுவனங்கள் இந்த அனுமதியை பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நிலக்கரி,மீத்தேன், ஷெல் கேஸ், ஷெல் ஆயில் என எந்த எரிபொருள் வளத்தையும் எடுத்துக்கொள்ள மத்திய அரசு திறந்தவெளி அனுமதி முறையை கடைபிடித்து வருகிறது. ஒற்றை அனுமதி என்பது ஒரே அனுமதியை பெற்றுக்கொண்டு ஈத்தேன் மட்டுமல்ல பூமிக்கடியில் இருக்கும் வளங்கள் எதுவானாலும் ஹைட்ரோ கார்பன் என்ற பொது பெயரில் எடுத்துக்கொள்ளலாம். திறந்தவெளி அனுமதி முறையில் 2018 ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் முதல் சுற்று அனுமதியை அளித்தது மத்திய அரசு. அதில் வேதாந்தா, ஓ.என்.ஜிசி. ஆகிய நிறுவனங்கள் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றிருந்தன. இந்த திட்டத்தால் மண்ணின் வளங்கள் அழிவதோடு மண்ணின் வளத்தை நம்பியுள்ள வேளாண்மை, அதனை நம்பியுள்ள விசாயிகள்,விவசாயிகளை நம்பியுள்ள மக்கள் என அனைவருக்குமே பாதிப்புதான்.

 

 Hydrocarbon in 32 more circles in Tamil Nadu... Shock info !!


இந்த நாசகார திட்டத்தை எதிர்த்து விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்க இரண்டு மற்றும் மூன்றாம் சுற்று அனுமதியை வழங்கியுள்ளது மத்திய அரசு என்பதுதான் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் உள்ளது.

இரண்டாவது சுற்றில் நாடுமுழுவதும் தமிழகம் உள்ளிட்ட 14 வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் சுற்றில் 18 வட்டாரங்களிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு திறந்தவெளி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாம் சுற்றில் நாகை,  திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி படுக்கையில் 474.19 ச.கிமீ பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது இண்டியன் ஆயில் கார்ப்ரேஷன். அனுமதி பெறப்பட்டுள்ள பரப்பு திருவாரூரில் திருத்துறைப்பூண்டி அடுத்த திருகாரவாசல் தொடங்கி வேளாங்கண்ணி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், காரியாபட்டி என ஒரு பிரமாண்ட சதுர வடிவ மேப்பே உருவாக்கப்பட்டுள்ளது.

 Hydrocarbon in 32 more circles in Tamil Nadu... Shock info !!


அதேபோல் நாகையில் திருப்பூண்டி, காரியாப்பட்டினம், கரும்பம்புலம்,  திருவாரூரின் மடப்புரம் ஆகிய 4 இடங்களில் ஐ.ஓ.சி  நிறுவனம் முதல் கட்டமாக ஆய்வு கிணறுகளை அமைக்க உள்ளது. மூன்றாம் சுற்றில் நாகை, காரைக்கால், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இதில் நாகை மாவட்டத்தில் 459.83 ச.கிமீ பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிபெற்றுள்ளது. 

தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் நல்லநாயகிபுரம், நெம்மேலி, இவாநல்லூர், சோழசேகரநல்லூர், ஆனந்ததாண்டவபுரம், பந்தலூர், டிமணல்மேடு, தில்லையாடி, சேஷமூலை ஆகிய இடங்களில் ஓ.என்.ஜி.சி ஆய்வு கிணறுகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு, காரைக்கால் ஆகிய இடங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 11 இடங்களில்  ஆய்வு கிணறுகளை அமைக்க உள்ளது ஓ.என்.ஜி.சி நிறுவனம்.

 Hydrocarbon in 32 more circles in Tamil Nadu... Shock info !!


அதேபோல் திறந்தவெளி அனுமதி முறையில் ராமநாதபுரத்தில் 1,403.41 ச.கிமீ பரப்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஓ.என்.ஜி.சி அனுமதி பெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் கருங்குடி, பெறுவயல், பெருங்கலூர், பலன்குளம் உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. முதல் சுற்று அனுமதிக்கே கண்டனங்கள் வலுத்துவரும் நிலையில் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல், வேளாண்மையை பற்றி கவலையில்லாமல் இரண்டாம், மூன்றாம் சுற்றுக்கும் மத்திய அரசு திட்டமிட்டு வருவது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.