Skip to main content

ஹைட்ரோ கார்பன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

மண்ணை மலடாக்கி விவசாயத்தை அழித்து விவசாயிகளை அகதிகளாக விரட்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு தொடங்கி தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் என டெல்டா மாவட்டங்கள் முழுவதும் விவசாயிகள் மத்தியில் போராட்டத் தீ பற்றி எரிந்தது. தீயை அணைக்க முயல்வது போல போராடிய மக்கள் மீதே வழக்குகளை போட்டு சிறையில் அடைத்தார்கள். எத்தனை வழக்கு போட்டு எத்தனை பேரை சிறைக்கு அனுப்பினாலும் பொன் விளையும் பூமியை தரிசாக்கும்  ஹைட்ரோ கார்பன் எடுக்க விடமாட்டோம் என்பதில் ஒட்டு மொத்த விவசாயிகளும் உறுதியாக உள்ளனர்.

HYDRO CARBON PROJECT DELHI SUPREME CORUT

இந்த நிலையில் தான் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதி காவிரி பாசப் பகுதிகளை ஏதோ காரணத்தால் தவிர்த்துவிட்டாலும் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அறிவிப்பு வெளியான பிப் 20- க்கு பிறகு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி இல்லை என்று அந்த சட்ட முன்வரைவுகள் சொன்னது. ஆனால் அதற்கு முன்பே அறிவித்து வேதாந்தா, ஓஎன்ஜிசி- யிடம் கொடுத்த திட்டங்கள் என்னாகும் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் போதே மன்னார்குடியில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் சில விவசாயிகளை வைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த ஆயத்தமானார் கோட்டாட்சியர். தகவல் அறிந்து சென்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் சட்டத்திற்கு புறம்பாக கூட்டம் நடத்தக்கூடாது என்று கூட்டத்தை நடத்த விடாமல் வாக்குவாதம் செய்து நிறுத்தினார். அடுத்த நாள் விவசாயிகள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள்.

HYDRO CARBON PROJECT DELHI SUPREME CORUT

இந்தப் பிரச்சனைகள் இப்படியே இருக்கும் நிலையில் தான் கடந்த மாதம் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஹைட்ரோ கார்பன் எடுக்க சுற்றுச்சூழல் அனுமதியோ மக்கள் கருத்தோ கேட்கவேண்டியதில்லை என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பிஆர் பாண்டியன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த நிரந்தரத் தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை இன்று (மார்ச் 2 திங்கள் கிழமை தொடங்க உள்ளது. இந்த வழக்கு சம்மந்தமாக டெல்லி செல்லும் பி.ஆர்.பாண்டியனை விவசாயிகள் வழி அனுப்பி வைத்தனர்.


இனிமேலாவது தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை உண்டா? இல்லையா? என்பதை தெளிவாக விளக்கினால் விவசாயிகள் சந்தேகமின்றி அச்சமின்றி வாழ்வார்கள்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (24.04.2024) தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.