Skip to main content

பிரியாணி சாப்பிட 450 கி.மீ பயணித்த குழு!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

ஐதராபாத் பிரியாணிக்கு அடுத்து பெயர் பெற்றது ஆம்பூர், வாணியம்பாடி பிரியாணி. இந்த வகை பிரியாணிக்கான வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். இவர்கள் வார இறுதி நாட்களில் வாணியம்பாடி அல்லது ஆம்பூர் வந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அப்படித்தான் வாணியம்பாடியில் பிரியாணி சாப்பிட 450 கி.மீ ஒரு குழு பயணம் செய்துள்ளது .

hyderabad biryani eating chennai to vaniyambadi cycle trip youngsters



திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் பிரபலமான பிரியாணி ஹோட்டல் என்ற பேரில் அசைவ உணவகங்கள் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் தயாராகும் பிரியாணி சாப்பிட சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர், தருமபுரி என பல பகுதிகளில் இருந்து ஆறு தேசிய நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்ளும் போது,  வாணியம்பாடி ஹோட்டலுக்கு வருகை தந்து பிரியாணி சாப்பிட்டு செல்வது வழக்கம்.

hyderabad biryani eating chennai to vaniyambadi cycle trip youngsters

இந்நிலையில் கடந்த வாரம் இறுதியில் டபள்யூ.சி.சி.ஜி (WCCG)என்ற அமைப்பை சேர்ந்த 12 பேர் சென்னையில் இருந்து சைக்கிளில் பயணம் செய்து வாணியம்பாடிக்கு வருகை தந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள, அந்த உணவகத்தில் பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை சாப்பிட்டு விட்டு மீண்டும் சைக்கிளில் சென்னை திரும்பி சென்றுள்ளனர்.
 

வாணியம்பாடியில் பிரியாணி சாப்பிட 450 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்த குழுவினருக்கு ஹோட்டல் உரிமையாளர் ஜீஷான் நன்றி தெரிவித்தார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.