Skip to main content

கணவனைக் கொலை செய்து நாடகம்... ஆண் நண்பருடன் கைதான மனைவி... 

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

 

விழுப்புரம் அருகே உள்ளது வி. அரியலூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜகுமாரன் (வயது 35). இவருக்கும் லாதா (வயது 28) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் நடந்துள்ளது. இதன் மூலம் இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமானவுடன் இவர்கள் இருவரும் விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளனர்.
 

இந்தநிலையில் ராஜகுமாரன் விழுப்புரம் புதுச்சேரி வழித்தடத்தில் ஓடும் ஒரு தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார் அதோடு ஓய்வு நேரத்தில் விழுப்புரத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளுக்குத் தற்காலிக கார் ஓட்டுனர் பணிக்கும் சென்று வந்துள்ளார். இப்படி ஆவின் நிறுவனத்தில் பணி செய்து வரும்போது அங்கே ஏற்கனவே டிரைவராக வேலை பார்த்து வந்த வழுதரெட்டியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் இவருக்கு அறிமுகமானார்.


 

bus driver

                                                ரஞ்சித்           ராஜகுமாரன்                 லதா 


இருவரும் அடிக்கடி சந்தித்து நெருங்கிய நண்பர்களாக பழகியதன் விளைவாக ரஞ்சித், ராஜகுமாரன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்தப் பழக்கம் ராஜகுமாரன் மனைவி லதா - ரஞ்சித் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நெருக்கம்  காலப்போக்கில் இருவருக்கும் இடையே தகாத உறவாக மாறியது. ராஜகுமாரன் டிரைவர் பணிக்குச் சென்ற பிறகு அடிக்கடி ராஜகுமாரன் வீட்டிற்கு ரஞ்சித் வந்து லதாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த தொடர்பு அந்த வீட்டின் உரிமையாளருக்கு தெரியவரவே அவர் ராஜகுமாரனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜகுமாரன் மனைவி லதாவைக் கண்டித்ததோடு அங்கிருந்து தனது சொந்த ஊரான வி.அரியலூருக்கு அழைத்துவந்து குடித்தனம் நடத்தி வந்தார்.

 

தன்னிடம் இருந்து லதா பிரிந்து விடுவார் என்று பயத்திலும், குழந்தையின் எதிர்காலம் கருதியும் சொந்த ஊருக்கு மனையியை அழைத்து வந்துள்ளார் ராஜகுமாரன்.  அப்படியும் லதா - ரஞ்சித் இடையேயான உறவு நிற்கவில்லை. ராஜகுமாரன் இல்லாத சமயத்தில் ரஞ்சித் அடிக்கடி அரியலூருக்கே வந்து ராஜகுமாரன் வீட்டில் லதாவுடன் உல்லாசமாக இருந்து விட்டு சென்றுள்ளார். இது அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கும் தெரியவந்துள்ளது.
 

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரன் டிரைவர் பணிக்குச் சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு மேல் விழுப்புரத்தில் ஹோட்டலில் டிபன் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். மறுநாள் காலை லதா, தனது கணவர் இறந்து கிடப்பதாக அழுது சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் யாருக்கும்  சந்தேகம் வரவில்லை.  இதையடுத்து ராஜகுமாரன் உறவினர்கள் ஓடி வந்துள்ளனர். ராஜகுமாரன் மரணம் எப்படி நடந்தது என்று யாரும் யூகிக்க முடியாத நிலையில், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.


 

 

இதையடுத்து போலீசார் விரைந்து வந்தனர். அப்போது இறந்து கிடந்த ராஜகுமாரன் அருகில் இரவு வாங்கிவந்த டிபன் பொட்டலம் பிரிக்கப்படாமல் அப்படியே கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லதாவை கணவர் இறந்தது சம்பந்தமாக எழுத்து மூலமாக புகார் அளிக்க சொல்லி அவரை தாலுகா காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர்.
 

அங்கே அவரிடம் விசாரணை செய்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து ராஜகுமாரன் வீட்டுக்கு அருகில் இருந்தவர்களிடம் காவல்துறை விசாரணை செய்ததில் ஒரு இளைஞர் ராஜகுமாரன் வீட்டில் இல்லாத சமயத்தில் அடிக்கடி வந்து செல்வதாக கூறியுள்ளனர். லதாவின் முரண்பாடான பேச்சின் மூலம் பலத்த சந்தேகம் அடைந்த காவல்துறையினர், உரியமுறையில் லதாவிடம் விசாரணை செய்ததில் லதா ரஞ்சித்துடன் சேர்ந்து கணவர் ராஜகுமாரனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
 

போலீசாரிடம் லதா அளித்த வாக்குமூலத்தில் சம்பவத்தன்று ராஜகுமாரன் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது ஏற்கனவே வீட்டில் ரஞ்சித்தும் நானும் ஒன்றாக இருந்ததை பார்த்த ராஜகுமாரன் கோபம் அடைந்தார். எங்களுக்குள் காரசாரமான சண்டை நடந்தது. உடனே கதவை உட்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு நான் என் கணவர் ராஜகுமாரன் தலையில் சுத்தியால் அடித்தேன், ரஞ்சித் ராஜகுமாரன் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி கொலை செய்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து ராஜகுமாரனை கொலை செய்த பிறகு ரஞ்சித் எங்கள் வீட்டுக்குப் பின்பக்க வழியாக வெளியேறி விட்டார். காலையில் தூங்கி எழுந்ததும் எதுவும் நடக்காததைப்போல என் கணவர் இறந்து விட்டதாக கூறி கதறி அழுது அக்கம் பக்கத்தினரை வரவழைத்தேன் என லதா போலீஸாரிடம் எந்தவித தயக்கமும் பயமும் படபடப்பும் இன்றி தெளிவாக வாக்குமூலம் அளித்துள்ளார்


 

 

இதையடுத்து லதாவையும் அவரது  கள்ளக்காதலன் வழுதரெட்டி ரஞ்சித்தையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் சிறைக்கு அனுப்பி உள்ளனர். ராஜகுமாரன் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைக்குப் பிறகு அவரது உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
 

மேலும் இந்தக் கள்ளக்காதல் கொலையில் ரஞ்சித் - லதா ஆகிய இருவர் மட்டும் செய்தார்களா? அல்லது இவர்களுடன் சேர்ந்து வேறு யாரேனும் இந்தக் கொலையை செய்தார்களா? வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகாத உறவால் செய்யப்படும் கொலைகள் வேதனை தருவதாக உள்ளது. கள்ளக்காதலர்கள் தங்கள் சுகத்தை மட்டுமே பெரிதாக எண்ணி கொலை செய்யத் துணிகிறார்கள். அவரவர்களுக்கு குழந்தைகள், உறவுகள் இருக்கின்றன. அவர்கள் நிலை என்னாகும் என்பதைப்பற்றி சிந்திக்க மறுக்கிறார்கள்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.