Skip to main content

கணவன்,மனைவி அடிக்கடி சண்டை...மகள் எடுத்த முடிவு...வியப்பூட்டும் சம்பவம்!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

திருவாரூர் மாவட்டத்தில் தன்னுடைய மகள் கோபப்பட்டு பேசாம இருந்ததால், குளத்தை தூர் வாரி உள்ளார் அந்த பெண்ணின் தந்தை. இதனால் அந்த பெண்ணையும் அவரது தந்தையையும் அப்பகுதி மக்கள் பாராட்டி வருகிறார்கள். இது பற்றி விசாரித்த போது, திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு பக்கத்தில் இருக்கும்  மருதவனம் காலனி தெருவில் வசித்து வருபவர் சிவக்குமார். இவருடைய மனைவி அருள்மொழி. சிவக்குமாரும், அவரது மனைவியும் அப்பகுதியில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்,விவசாய வேலை இல்லாத நேரங்களில் கிடைக்கும் கூலி வேலைக்கு செல்கிறார்கள். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவரும் மருதவனம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். மகன் விவேகானந்தன் பத்தாம் வகுப்பும், மகள் நதியா ஏழாம் வகுப்பும் படித்து வருகின்றனர். 

 

family

 

கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய கஜா புயலின் போது சிவகுமாரின் வீடு இடிந்து விழுந்துள்ளது. இதனால் வீடு இல்லாமல் சிவக்குமார் குடும்பத்தினர் இருந்துள்ளனர். கஜா புயலுக்கு பிறகு சிவக்குமாருக்கு விவசாய வேலையும், கூலி வேலையும் கிடைக்காமல் வறுமையில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலுடன் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் மீது சண்டை போட்டுள்ளார். குறிப்பாக அவரது மனைவியிடம் அடிக்கடி சண்டைப் போட்டுள்ளார். சிவக்குமார் தினமும் மனைவி கூட சண்டை போடுவதை பார்த்த அவரது மகள் நதியா சிவகுமாரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். தனது மகள் கோபப்பட்டு சில நாட்களில் பேசி விடுவார் என்று நினைத்த சிவக்குமாருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. கோபமான நதியா 8 மாதங்களுக்கு மேல் தனது தந்தை சிவக்குமாரிடம் பேசவில்லை. தனது மகள் தன்னிடம் 8 மாதங்களுக்கு மேல் பேசாமல் இருப்பதை நினைத்து மிகவும் மனம் வருத்தியுள்ளார் சிவக்குமார். 


பின்பு தனது மகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அப்போதும் தனது தந்தையை மன்னிக்கவில்லை. பின்பு நான் என்ன செய்தால் என்னுடன் நீ பேசுவாய் என்று தனது மகளிடம் கேட்டுள்ளார் சிவக்குமார். அதற்கு நதியா இனிமேல் அம்மாவிடம் நீங்கள் சண்டை போடக் கூடாது. அப்புறம் நான் படிக்கும் பள்ளி அருகே உள்ள கருங்குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் அபோது தான் நான் உங்களிடம் பேசுவேன் என்று கூறியுள்ளார்.  தன் மகள் நதியாவுக்காக சிவக்குமார் சாப்பிடாமல் கூட குளத்தைச் சுத்தம் செய்துள்ளார். அவருடன் அவரது மனைவியும் சேர்ந்து சுத்தம் செய்துள்ளார். இதன் பிறகே அவரது மகள் நதியா தனது அப்பா சிவக்குமாரிடம் பேசியுள்ளார். சிவகுமாரும் அவரது மனைவியும் குளத்தை சுத்தம் செய்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதோடு கணவன், மனைவி சண்டையை அவரது மகள் இவ்வளவு எளிதாக சமாதானம் செய்தது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.